You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''அறப்போராட்டங்களுக்கு செவி சாய்ந்திருந்தால் இந்நிலை உருவாகியிருக்குமா?''
சென்னையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைக் காணவந்த ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஐபிஎல் போட்டிகளை உற்சாகமாகக் காண விரும்பும் ரசிகர்கள் மீது இத்தனை கெடுபிடிகள் அவசியமா? இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற காவல்துறையின் வாதம் சரியா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
''அறப் போராட்டங்களின் வாயிலாக மக்கள் கேட்கும் வாழ்வாதார உரிமைகளை பெற்றுக் கொடுத்திருந்தால் விளையாட்டை காண வருவோரிடம் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் உருவாகியிருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் முன்னமே விளையாட்டை வேறு மாநிலத்திற்கு மாற்றிருக்க வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உரிமைப் போராட்டங்களுக்கிடையே விளையாட்டை ரசிக்கச் செல்வது என்பது நம்மைக் கண்டு நாமே சிரிப்பதற்கு சமமாகும்'' என பேஸ்புக்கில் எழுதியுள்ளார் சக்தி சரவணன்.
வாதம் விவாதம் பகுதியில் பின்னூட்டம் இட்டுள்ள துரை முத்துச்செல்வம், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கட்டுப்பாடுகள் விதிப்பது சரியல்ல. கிரிக்கெட்டிற்கும் காவேரி பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால் மத்திய அரசு தொடர்புடைய நடவடிக்கைகளை நிறுத்தலாம். அதை விட்டுவிட்டு மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினால் எப்படி மத்திய அரசுக்கு வலிக்கும் என தெரியவில்லை'' என்கிறார்.
''பார்ப்பவர்களுக்கு கெடுபிடி, அரசுக்கு அது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இந்த கெடுபிடியில் ரசிகர்கள் போய் விளையாட்டை ரசிக்க வேண்டுமா? விவசாயமா விளையாட்டா யோசிக்க வேண்டும்'' என எழுதியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்