You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: "ஆளுமை திறனற்ற அரசுதான் தமிழகத்தின் கடன் சுமைக்கு காரணம்"
தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலை இதற்கு காரணமா? அல்லது அரசியல்வாதிகளின் இலக்கற்ற கொள்கைகளால் ஏற்பட்ட விளைவா? என்று ‘வாதம் விவாதம்‘ பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.
"அரசியல்வாதிகளின் இலக்கற்ற கொள்கைதான் தான் ஒட்டுமொத்த கடனுக்கும் காரணம்" என கூறியுள்ளார் பிபிசி ஃபேஸ்புக் நேயர் துரை முத்துசெல்வம். மேலும், "லாபம் தரும் தொழில்களை அரசுடைமை ஆக்காமல் தனியாரிடம் வழங்கி இருக்கிறார்கள் என்றும் சுய லாபத்திற்காக அரசியல்வாதிகள் தமிழக பொதுத்துறை நிறுவனங்களை வேண்டுமென்றே நஷ்டம் அடைய செய்து இருக்கிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மாநில மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த சிறப்பு நிதிகளும் வழங்கப்படுவதில்லை என்பதால் தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளதாக" கூறுகிறார் பிபிசி நேயர் சக்தி சரவணன்.
"கண்டிப்பாக அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயல்களினால்தான் இந்த கடன் சுமை" என்று நிசார் அஹமத் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் காரணம் என்று கூற முடியாது. சில ஆளுமையற்ற அரசால் வரும் வினை தான் இவை" என்று பிபிசி நேயர் அருண் கூறியுள்ளார்.
"தமிழக அரசு நூலற்ற பட்டம் என்றும் காற்று தள்ளிக் கொண்டு செல்வது போல பா.ஜ.கவுக்கு பின் செல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் சுப்பிரமணியன். ஆளுமை இல்லாத அரசில் கடன் மட்டுமே மிஞ்சியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
"தமிழக அமைச்சர்களின் கொள்கைகள் அற்ற ஆட்சியும், சுயநலமும், மக்களை பற்றியும் நாட்டைப் பற்றியும் கொஞ்சமும் கவலைப் படாத அரசால்தான் தமிழகத்தின் கடன் உயர்ந்துள்ளது" என்கிறார் சரோஜா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்