You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திராவிடநாடு கோரிக்கைக்கு ஜின்னாவை நாடிய பெரியார்: சுப்ரமணியன் சுவாமி
பெரியார் சிலை இடிப்பு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஃபேஸ்புக் பக்கத்தில் பதியப்பட்ட கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி பெரியார் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''பெரியார் 'நாயக்கர்' சிலையை தகர்ப்பது குறித்து நாம் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, பெரியார் பிரிட்டிஷ் ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் பிரிட்டிஷ் படையினர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்'' என்று கூறியுள்ளார்.
மேலும், மற்றொரு ட்விட்டர் பதிவில், ஜின்னா தனிநாடு கோரி பிரிட்டிஷாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தனி திராவிட நாடு கோரிக்கையையும் சேர்க்குமாறு பெரியார் வலியுறுத்தினார் என்றும் ஆனால் ஜின்னா பெரியாரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்' என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பெரியாரைக் குறிக்க அவர் 'நாயக்கர்' என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.
பிரிட்டனிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியை பெரியார் துக்கதினமாக அனுசரித்தார் என்ற செய்தியை கொண்டிருக்கும் திராவிடன் பத்திரிகையின் அட்டைப்படத்தையும் சுப்ரமணியன் சுவாமி ரீ ட்வீட் செய்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :