You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: “மக்கள் மாறாமல் நிர்வாகமோ, நேர்மையின்மையோ மாறப் போவதில்லை”
கடந்த ஆண்டு, 45 சதவிகித இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர் என்று, டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.ஊழலை ஒழிக்கமுடியாததற்கு நிர்வாகத்தில் உள்ளவர்களின் நேர்மையின்மை காரணமா? ஊழல் பெருக பொதுமக்கள் ஒத்துழைக்கிறார்களா? என்று, பிபிசி தமிழ் நேயர்களிடம், வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு நேயர்கள் அளித்த பதிலை தொகுத்து வழங்குகிறோம்.
"லஞ்ச லாவண்யம் பெருக மக்களாகிய நாமும்தான் ஒரு வகையில் காரணமாகிவிடுகிறோம். நேர்மையான வழியில் எதையும் பெற நாம் தயாராக இல்லை." என்று கூறியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன் என்ற நேயர்.
"தெரிந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில்லாத சாமானியர்கள் சட்டச்சிக்கல் சார்ந்த வேலைகளை முடிக்க வேறு வழியில்லாமல் லஞ்சம் கொடுக்கின்றார்கள்.. இவர்களிடம் போதிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம்."என்கிறார் சிவகுமார்.
"பொது மக்கள் லஞ்சம் ஒழியனும்னு பேசுறது பொய்....லஞ்சத்த வளக்கிறதே இவங்க தான்..கொடுக்க மாட்டேன்னு உறுதியா இருந்த யாரும் வாங்க முடியாது....சுயநலம்....தனக்கு காரியம் நடக்கனும்னா சார் வாங்குறத வாங்கிட்டு செய்யுங்கன்னு தூண்டுவதே லஞ்சம்னு முழங்கற திருவாளர் பொதுஜனம் தான்......திருந்த வேண்டியது பொதுமக்களே...பிறரை பழி சொல்வது ஏமாற்றவே" என்று கூறியுள்ளார் ஆர்.அஜன் என்ற நேயர்.
"மக்களே முக்கிய காரணம் , சட்டத்தை ஏமாற்றும் அதிகாரிகள் இரண்டாவது காரணம்"என்று தெரிவித்துள்ளார் பொ.கருணா கரன் என்ற நேயர்.
"அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்களே இதற்கு முக்கிய காரணம்..! பொதுமக்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்டுள்ளார் லத்தீஃப் யூசஃப்.
"ஆரம்பம் முதல் இறுதிவரை கேட்கிறார்கள். பெண் ஊழியர்களும் லஞ்சம் வேண்டுமென வலியுறுத்துகிறார்கள். பலர் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இருப்பினும் இது தொடர்ந்து நடந்துவருகிறது" என்று பதிவிட்டுள்ளார், கேசவ மூர்த்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்