மும்பைக்கு ஒரு புகைப்பட கலைஞரின் காதல் கடிதங்கள் (படத்தொகுப்பு)

சோனி தாராப்பூர்வாலா ஒரு முன்னணி இந்திய புகைப்படக்கலைஞர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

‘மிசிசிப்பி மசாலா‘, ‘த நேம்ஸ்சேக்‘, மற்றும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சலாம் பாம்பே‘, போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதி பிரபலமாக அறியப்படுகிறார். தேசிய விருது வென்ற ‘லிட்டில் ஸிஸௌ‘ என்ற திரைப்படத்தை அவர் இயக்கியும் இருக்கிறார்.

அவர் வளர்ந்த மும்பை நகரத்தை தாராப்பூர்வாலா 1977 ஆம் ஆண்டிலிருந்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.

இவருடைய புகைப்படங்கள் வித்தியாசமான மற்றும் அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்து, இந்தியாவில் பன்முக தன்மையோடு விளக்கும் நகரங்களில் ஒன்றான மும்பையின் சமூக வரலாற்றிற்கு முக்கிய பங்காற்றுகின்றன.

அவருடைய புகைப்படங்கள் வகுப்பு மற்றும் சமூக எல்லைகளை கடந்து, அந்நகரத்தில் வாழும் ஒருவரின் நேசமிக்க பார்வையை காட்டுகிறது. உலகிலேயே அதிக மக்கள் வாழும் பல நகரங்களில் ஒன்றான மும்பையை அவருடைய புகைப்படங்கள் கண்டுணர உதவுகின்றன.

மும்பையில் நடத்தப்படவிருக்கும் கண்காட்சியில், காட்சிக்கு வைக்கப்படும் படங்கள், இந்நகரத்தின் விசித்திரமான மனிதர்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரை அந்த நில அமைப்பிலேயே காட்டும் ஒரு தனிப்பட்ட ஆவணம். ஓர் எளிய பார்வையாளரின் நோக்கில் மும்பையின் பண்பாடு மற்றும் அரசியலைக் காட்டும் கண்ணாடியாக உள்ளன இப்படங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :