You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ரோஹிஞ்சா அகதிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம்''- மத்திய அரசு
இந்தியாவில் உள்ள சில ரோஹிஞ்சா முஸ்லீம் அகதிகளுக்கும் மற்ற நாடுகளில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் இது நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த மனுவில், இந்தியாவில் ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாக நுழைவதை ஒழுங்கமைக்கும் பல முகவர்கள் ஒரு வலையமைப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஐநா மூலம் பதிவு செய்யப்பட்ட மற்றும் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்த நாற்பதாயிரம் முஸ்லீம் ரோஹிஞ்சாக்களை நாடு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய போது இக்குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இவ்வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்