You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் இந்திய `உளவாளி` விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நெதர்லாந்தின்’த ஹேக்’ நகரில் உள்ள சர்வதேச நீதி மன்றத்தில், உளவுபார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரியை பாகிஸ்தான் தூக்கிலிடுவதைத் தடுக்க வேண்டும் என இந்தியா இன்று வாதிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் குல்புஷன் ஜாதவை சந்திக்க, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் ராஜரீக உறவுகளுக்கான வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா குற்றம் சுமத்துகிறது;
ஆனால் தாங்கள் சட்டரீதியான நடைமுறைகளை சரியாக கடைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பொதுவாக பாகிஸ்தானுடனான தனது கடினமான உறவில் எந்த ஒரு சர்வதேச அமைப்பையும் இந்தியா எளிதில் ஈடுபடுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்