You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் : சுப்பிரமணியன் சுவாமி
வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும் என்றும் முக்கியமான நேரத்தில் சென்னையில் இல்லாமல் இந்த விவகாரத்தில் ஆளுநர் தவறிழைத்துள்ளார் என்றும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிபிசி தமிழுக்கு அளித்த ஃபேஸ்புக் நேரலையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவருடைய முழு ஃபேஸ்புக் நேரலையை காண : சுப்ரமணியன் சுவாமி உடன் ஃபேஸ்புக் நேரலை
ஆளுநர் துரோகம் செய்துவிட்டார்
பிபிசி தமிழுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த ஃபேஸ்புக் நேரலையில், ஆளுநர் இந்த விவகாரத்தில் சட்டத்துக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும், சட்டரீதியாக முடிவெடுக்க மத்திய அரசின் அனுமதியையோ அல்லது வேறு யாருடைய அனுமதியையும் இதில் அவர் பெற வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
பன்னீர்செல்வம் ஒரு கோழை
தான் ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சுப்ரமணிய சுவாமி, அப்படி செய்தால் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை , முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர் என்றார்.
முதல்வரின் ராஜிநாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது என்றும், சட்டத்திற்கு அதற்கு அனுமதியில்லை என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.
இப்படி பயப்படும் பன்னீர்செல்வம் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடாது என்று கூறியுள்ள அவர் தமிழகத்தில் உள்ள பா.ஜ.கவும் திராவிட கட்சிகளையும் போலத்தான் செயல்படுவதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார்.
பொறுக்கி என்று சொல்லவில்லை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈடுபட்டவர்களை பொறுக்கி என்று குறிப்பிட்டதாக எழுந்த சர்ச்சை பற்றி குறிப்பிட்ட சுவாமி, நான் அப்படி சொல்லவில்லை என்றும், தேசத்துரோகிகளைத்தான் பொறுக்கி என்று குறிப்பிட்டதாகவும் எல்லா தமிழர்களையும் நான் கூறவில்லை என்றும் கூறினார்.
மேலும், இவர்களுக்கு நான் விளக்கம் கூறவேண்டும் என்ற அவசியமில்லை என்றும், அவர்களெல்லாம் மெரினாவில் கடைசி நாளன்று அடித்து துரத்தப்பட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்டாலின் தான் ஒரு இந்து சொன்னால் நன்றாக இருக்கும்
தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினின் தலைமை குறித்து பேசிய சுப்பிரமணியன் சுவாமி, அவர் தலைமை தாங்குவதற்கு தகுதியானவர் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலினும் தான் ஒரு இந்து என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அவருடைய முழு ஃபேஸ்புக் நேரலையை காண : சுப்ரமணியன் சுவாமி உடன் ஃபேஸ்புக் நேரலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்