You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை மெரினாவில் தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலிசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலையில், கடற்கரையோரம் சுமார் 5 அயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர்.
இன்று அதிகாலை முதலே சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் பெருந்திரளாகக் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டங்களைப் போலிசார் இன்று கலைக்கத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில், மெரினாவில் போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆதரவாளர்கள் கடற்கரையிலிருந்து ஓடிப் போய் கடலை ஒட்டி நிற்பதையும், போலிசார் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முயல்வதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இன்று காலை 4 மணி அளவில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி போலிசார் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, 6 மணியளவில் போலிசார் தரப்பில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டு சட்ட முன் வடிவு போராட்டக்காரர்களிடம் வழங்கப்பட்டது.
போலிசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் போராட்டத்தை கைவிட்டனர்.
மற்றொரு குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்