You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கால்பந்து அரையிறுதிக்குள் நுழையும் நாடுகள் எவை? ஒரு பன்றியின் கணிப்பு
''சிறப்பு சக்தியுடன்'' இருக்கும் ஒரு பன்றி, கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு நுழையும் நான்கு நாடுகளை தேர்ந்தேடுத்துள்ளதாக அதை நம்புகிறவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் டெர்பிஷையர் பகுதியின் ஹெஜ் கிராமத்தைச் சேர்ந்த மார்கஸ் என்ற இந்த சிறிய பன்றி, பெல்ஜியம், அர்ஜெண்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் அரையிறுதிக்குள் நுழையும் என் தேர்ந்தேடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மற்ற நாடுகளின் கொடிகள் குத்தப்பட்டிருந்த அனைத்து ஆப்பிள்களையும் தின்ற இப்பன்றி, இந்த நான்கு நாடுகளின் கொடிகள் குத்தப்பட்டிருந்த ஆப்பிள்களை மட்டும் சாப்பிடவில்லை.
2014 ஃபிஃபா உலக போப்பையையும், பிரெக்சிட் வாக்கெடுப்பையும், அமெரிக்க அதிபர் தேர்தலையும் இப்பன்றி சரியாக கணித்ததாக இதன் உரிமையாளர் ஜூலியட் ஸ்டீவன்ஸ் கூறுகிறார்.
ஸ்டீவன்ஸ் தனது பண்ணையில் 100 பன்றிகளை வளர்க்கிறார். ஆனால், இப்பன்றிக்குத்தான் தன் இதயத்தில் தனி இடம் வைத்துள்ளார்.
''இது ஒரு அழகான ஆளுமை. குழப்பங்களில் கலக்கமடையாது.'' என்கிறார் அவர்.
இப்பன்றி 100% சரியாக கணிக்கும் என இதன் உரிமையாளர் கூறினாலும், சில சமயம் சறுக்கியுள்ளது.
இப்பன்றி கணித்திருக்கும் நான் நான்கு நாடுகளில், இரண்டு நாடுகள் கால் இறுதியில் மோத வேண்டும். எனவே நான்கு நாடுகளும் அரை இறுதிக்கு செல்வது சாத்தியமில்லை.
ஆனால், வெற்றியாளரைத் தேர்வு செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு இதற்கு உள்ளது. 2010 உலகப்கோப்பை கால்பந்து போட்டியின் போது, பால் என்ற ஆக்டோபஸ் வெற்றியாளரைச் சரியாக கணித்ததாகச் சொல்லப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்