You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அதிபர் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், சாட், இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாட்டு பயணிகளுக்கு எதிராக பெறப்பட்ட உத்தவுகள் இன்னும் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பயணத்தடை குறித்து அவர் பிறப்பித்த உத்தரவின் மூன்றாவது வரைவை இந்த தீர்ப்பு குறிப்பிடுகிறது.
நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் ஏழு நீதிபதிகள் இந்த பயணத்தடை மீது கீழவை நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த உத்தரவுகளை விலக்க ஒப்புக்கொண்டனர்.
நீதிபதிகள் ரூத் படேர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர் ஆகியோர் மட்டுமே அதிபரின் பயணத்தடை மீதான தடை தொடர வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருந்தனர்.
தேசிய குடிவரவு சட்ட நிலையத்தின் சட்ட இயக்குநரான கேரன் டம்லின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 'பேரழிவான செய்தி' என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்