ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவு : ஐ.நா குற்றச்சாட்டு
மியான்மாரில் உள்ள படையினர் பெரும் எண்ணிக்கையிலான வயது வந்தோர் மற்றும் குழந்தைகளை கொன்றிருப்பதாகவும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் மற்றும் இன சுத்திகரிப்பாகவும் இந்த வன்செயல்கள் கருதப்படக்கூடியவை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மியான்மாரிலிருந்து அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச்சென்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் 200க்கும் அதிகமானோரை ஐ.நா பேட்டி கண்டுள்ளது.
சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலை முன்னர் மறுத்து வந்த மியன்மார் அரசு, தற்போது ஐ.நாவின் குற்றச்சாட்டுக்களை மிகவும் தீவிரமாக எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












