ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விளையாடப்படும் ஜல்லிக்கட்டு, தமிழர்களின் வீர விளையாட்டாக முன்வைக்கப்படுகிறது. இந்த விளையாட்டின் வரலாறு என்ன?
தை மாதம் பிறந்த பிறகு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.
மாடு பிடிக்கும் விளையாட்டு, பொதுவாக ஜல்லிக்கட்டு எனக் குறிப்பிடப்பட்டாலும் இது விளையாடப்படும் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் பொதுவாக ஜல்லிக்கட்டு என்ற பெயரிலும் ராமநாதபுரத்தில் எருது கட்டு, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மஞ்சு விரட்டு என இந்த விளையாட்டுகள் நடக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



