சீனாவில் மசூதிகளை அரசே இடிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
சீனாவில் மசூதிகளை அரசே இடிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
"சீனா மசூதிகளை மூடுகிறது, அழிக்கிறது அல்லது வேறு நோக்கத்திற்காக மாற்றுகிறது" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தனது புதிய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஒடுக்குமுறையானது சீனாவில் இஸ்லாம் மதத்தை தடுப்பதற்கான "அமைப்பு ரீதியான முயற்சியின்" ஒரு பகுதியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியாக மனித உரிமை மீறல்களின் பெருகிவரும் ஆதாரங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சீன அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



