You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்பாலும் அறிவாலும் மாணவர்களை கவர்ந்த 90 செ.மீ உயர பள்ளி ஆசிரியை
மாற்றுத்திறன் காரணமாக, பல ஆண்டுகளாக தான் வெறுக்கப்பட்டதாக கூறுகிறார் பிகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ரீட்டா ராணி.
"என் உயரத்தை வைத்து பலர் என்னைக் கிண்டல் செய்வார்கள். அவர்கள் உயரத்தை மட்டுமே பார்த்தார்கள், என் திறனை பார்த்ததில்லை. அது எனக்கு வருத்தத்தை அளித்தது, ஆனால் அவர்கள் சொன்னது தவறு என நிரூபிக்க நினைத்தேன்." என்கிறார் ரீட்டா ராணி.
தனது 13 வருட ஆசிரியை பணியில், அவர் பல மாணவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
"அவர் மிகவும் அன்பான ஆசிரியை. அவரது வகுப்பு என்றால் நாங்கள் ஆர்வமாக இருப்போம். நாங்கள் தவறு செய்தால், அவர் ஒருபோதும் எங்களைத் திட்டுவதில்லை. மாறாக, அன்பாக எடுத்துச் சொல்வார். எல்லோரும் தவறு செய்வார்கள், அது இயல்பு தான் என எங்களிடம் கூறுவார்" என ரீட்டா குறித்து விவரிக்கிறார்கள் அவரது மாணவர்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு