You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலங்கானா தேர்தல்: காங்கிரஸிடம் செல்வாக்கை இழந்துவிட்டதா பாஜக? பிபிசி கள ஆய்வு – வீடியோ
தெலங்கானாவில் உருவானதிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. கடந்த ஆண்டுவரை பின்னடைவைச் சந்தித்துவந்த காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்தது எப்படி? பா.ஜ.கவின் நிலை என்ன?
மாநிலத்தில் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கிறது பி.ஆர்.எஸ். (முன்பு டி.ஆர்.எஸ்.). தான் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது அந்தக் கட்சி.
ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த முறை, பி.ஆர்.எஸ்சுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் இந்தக் கட்சி போட்டியிடுகிறது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
பா.ஜ.க. 111 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி 8 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இது தவிர ஏ.ஐ.எம்.ஐ.எம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன.
பாரத் ராஷ்ட்ர சமிதி - காங்கிரஸ் கூட்டணி - பா.ஜ.க. கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுவதைப் போலத் தோற்றம் இருந்தாலும், களத்தில் பாரத் ராஷ்ட்ரிய சமிதிக்கும் காங்கிரஸுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
களத்திலிருந்து பிபிசி தமிழ் வழங்கும் தொகுப்பு.
தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்
படத்தொகுப்பும் ஒளிப்பதிவும்: ஜெரின் சாமுவேல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)