You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் திருநங்கை
மதுரை அலங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட கல்லணை கிராமத்தைச் சேர்ந்த சிந்தாமணி என்கிற திருநங்கை கடந்த 2017ல் இருந்து ஜல்லிக்கட்டுக்குத் தனது காளை இறக்கி வருகிறார். மிகவும் வறுமை சூழ்நிலைக்கு இடையில் வாழும் இவர், ஆரம்பக் காலத்தில் கட்டட சித்தாள் வேலைக்குச் சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து ஜல்லிக்கட்டு காளை வாங்கினார். 2017ல் இருந்து பாலமேடு, அவனியாபுரம், சக்குடி என்று பல இடங்களில் தனது காளையைக் கட்டவிழ்த்து இருக்கிறார். அன்றாடம் பானிபூரி கடையில் தினக்கூலியாக பணியாற்றி வரும் சிந்தாமணி அதில் ஈட்டும் வருமானத்தில் தான் வளர்க்கும் காளைகளுக்குத் தேவையான உணவு தீவிரத்தை வாங்கி பராமரித்து வருகிறார்.
தயாரிப்பு: நடராஜன் சுந்தர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்