You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செர்பியாவில் 'சிங்கிள்' தேனீக்கள் பொழுதைப் போக்க தனி ஹோட்டல் - எங்கே உள்ளது?
பூமி அதன் போக்கில் இருப்பதற்கான காரணங்களுள் ஒன்றுதான் இந்த தேனீக்கள். தேனீக்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. நாம் உண்பதில் மூன்றில் ஒரு பங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு தேனீக்கள் உதவுகின்றன.
தேனீக்களிடம் இருந்து நாம் பெறும் மிகப்பெரும் பலன் மகரந்தச் சேர்க்கை. சுற்றுச்சூழலில் உள்ள அனைத்தும் நிலைத்தன்மையுடன் இருக்க மகரந்தச் சேர்க்கை நடைமுறை மிக முக்கியம். ஏனெனில், அதுதான் தாவரங்களை இவ்வுலகில் பரப்பச் செய்கிறது. இதனால் தான் பூமி இன்று நாம் பார்ப்பது போன்று உள்ளது.
மகரந்தச் சேர்க்கை செய்து பயிர்கள் வளர்வதற்கு தேனீக்கள் உதவுகின்றன. பெரும்பாலான தாவரங்கள் இனப்பெருக்கத்திற்கு மகரந்தத் துகளைத்தான் பயன்படுத்துகின்றன.
ஆனால், தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை இனங்கள் குறைந்து வருகின்றன. மனிதர்கள் அதிகமான வீடுகளை கட்டும் நிலையில் தேனீக்களின் வீடுகள் அழிந்துவருகின்றன.
இந்த பிரச்னையை சமாளிக்க செர்பியாவில் புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)