You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலாய் லாமா பிறந்த நாள்; கோலாகலமாக நடந்த கொண்டாட்டம்
14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோவின் 90வது பிறந்தநாள் தர்மசாலாவின் மெக்லாட் கஞ்சில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க உயர் திபெத்திய லாமாக்களுடன் நூற்றுக்கணக்கான திபெத்திய பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இந்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜு மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்கள் வந்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் இங்கு உள்ளனர்.
தனது பிறந்தநாள் செய்தியில், தலாய் லாமா தான் ஒரு புத்த துறவி என்றும், அதனால் தனது பிறந்தநாளை அதிக ஆரவாரத்துடன் கொண்டாடுவதில்லை என்றும் கூறினார். ஆனால், சீடர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதால் பொருள் வளர்ச்சிக்காக உழைப்பது அவசியம் என்றாலும், அதைவிட முக்கியமானது மன அமைதி என்ற செய்தியை வழங்க விரும்பினார். தலாய் லாமாவின் கூற்றுப்படி, மக்கள் ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டும்போதுதான் மன அமைதி வரும்.
சில நாட்களுக்கு முன், அவர் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார், அதில் அவருக்குப் பிறகு அடுத்த தலாய் லாமா வருவார் என்று கூறினார். அது குறித்து திபெத்திய சமூகம் கொண்டிருந்த கவலைகள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. இன்று முதல் அடுத்த ஓர் ஆண்டுக்கு, திபெத்திய பௌத்தத்துடன் தொடர்புடைய மக்கள் 'கருணை ஆண்டை' கொண்டாடப் போகிறார்கள்.
14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோவின் 90வது பிறந்தநாள் தர்மசாலாவின் மெக்லாட் கஞ்சில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க உயர் திபெத்திய லாமாக்களுடன் நூற்றுக்கணக்கான திபெத்திய பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். இந்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜு மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்கள் வந்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் இங்கு உள்ளனர்.
தனது பிறந்தநாள் செய்தியில், தலாய் லாமா தான் ஒரு புத்த துறவி என்றும், அதனால் தனது பிறந்தநாளை அதிக ஆரவாரத்துடன் கொண்டாடுவதில்லை என்றும் கூறினார். ஆனால், சீடர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதால் பொருள் வளர்ச்சிக்காக உழைப்பது அவசியம் என்றாலும், அதைவிட முக்கியமானது மன அமைதி என்ற செய்தியை வழங்க விரும்பினார். தலாய் லாமாவின் கூற்றுப்படி, மக்கள் ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டும்போதுதான் மன அமைதி வரும்.
சில நாட்களுக்கு முன், அவர் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார், அதில் அவருக்குப் பிறகு அடுத்த தலாய் லாமா வருவார் என்று கூறினார். அது குறித்து திபெத்திய சமூகம் கொண்டிருந்த கவலைகள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. இன்று முதல் அடுத்த ஓர் ஆண்டுக்கு, திபெத்திய பௌத்தத்துடன் தொடர்புடைய மக்கள் 'கருணை ஆண்டை' கொண்டாடப் போகிறார்கள்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு