You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - இரான் மோதல்: இந்தியாவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமா? - காணொளி
இஸ்ரேல் இரான் இடையேயான அண்மைய மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு உதவி வருகிறது. மற்றொரு புறம் இரான் தனித்துவிடப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இரானுக்கு உதவவில்லை. ஆனால், இந்தியாவோ இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
இது போன்ற சூழலில், மேற்கு ஆசியாவில் இரான் வலுவிழந்தால் அது இந்தியாவை பாதிக்கும் என்ற பார்வையும் உள்ளது. ஏனெனில் இந்தியா பல்முனை கொண்ட உலகைப் பற்றி பேசுகிறது. 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனை பிளவுபடுத்தி பனிப்போர் முடிவுக்கு வந்தது. அப்போது உலகம் இருமுனையில் இருந்து ஒற்றைத்துருவ அதிகாரத்தின் கீழ் வந்தது.
மேற்கு ஆசியாவில் உள்ள இரான், உலக விவகாரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து வருகிறது. உலக நாடுகள் ஒரு நாட்டின் உத்தரவின் கீழ் செயல்படக்கூடாது என்பது இந்தியா நிலைப்பாடாகவும் உள்ளது.
எனவே, இஸ்ரேலும் அமெரிக்காவும் வலிமையடையும் சூழலில் இந்த பல்முனை உலகிற்கான இந்தியாவின் கனவு நிஜமாகுமா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை விவகாரங்களின் நிபுணர்கள் கூறுவது என்ன? முழு விவரம் இந்த காணொளியில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு