You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்டியல் சமூகத்தினர் கோவிலுக்கு வந்ததால் பரிகாரமா? விழுப்புரம் மேல்பாதி சர்ச்சை
"அந்தக் கோவிலுக்குள் பல ஆண்டு காலமாக நாங்கள் யாரும் சென்றதில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளே சென்றோம். அதற்கே இவ்வளவு பிரச்னைகள். அனைவரும் சமம் என நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், இங்கு சமம் என்பதே கிடையாது" - மிகுந்த வேதனையோடு பேசுகிறார், விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா.
சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. ஆனால், வழிபாடு நடத்தாமல் இரு பிரிவு மக்களும் புறக்கணித்துள்ளனர்.
என்ன காரணம்? மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்தது என்ன?
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு