பாலமேடு ஜல்லிக்கட்டு: 23 காளைகளை அடக்கிய வீரர்; இளைஞர்களை ஓடவிட்ட காளைகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டின் முதன்மையான 3 ஜல்லிக்கட்டுகளில் ஒன்றான பாலமேட்டில் ஜல்லிக்கட்டு வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சிறப்பாக செயல்பட்டு 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த தமிழரசன் காரை பரிசாக வென்றார். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் காலை 8 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு மாலை நான்கரை மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 860 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறி வந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். 

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், யாருக்கும் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்ட வண்ணம் இருந்தன. 

ஐந்தாம் சுற்று நிலவரப்படி, 18 காளைகளை பிடித்த, மணி என்பவர் முதலிடத்தில் இருந்தார். அடுத்த இடங்களில் 15 காளை பிடித்த ராஜாவும், 11 காளைகளை அடக்கிய தமிழரசனும் இருந்தனர். 

ஐந்தாவது மூன்றாவது இடத்தில் இருந்த சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர் அடுத்தடுத்த சுற்றுகளில் அபாரமாக செயல்பட்டு காளைகளை வென்று பரிசுகளை பெற்றபடியே இருந்தார். 

தமிழரசன் கடைசிக் கட்ட சிறப்பான செயல்பாடுகளால், போட்டியாளர்களை முந்தி, பாலமேடு ஜல்லிக்கட்டின் நிறைவில் முதலிடத்தைப் பிடித்தார். 

மொத்தம் 23 காளைகளை அடக்கிய தமிழரசன் முதலிடம் பிடித்தார். அவருக்கு 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 

பாலமேடு ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த சின்னப்பட்டி தமிழரசன்
பாலமேடு ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, 19 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த பாலமேடு மணி

பாலமேட்டைச் சேர்ந்த மணி 19 காளைகளை அடக்கி இரண்டாவது இடம் பிடித்தார்.

இதேபோல், களத்தில் வீரர்களை எதிர்கொண்ட விதத்தில் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு காளைகள் தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு
படக்குறிப்பு, சிறந்த காளையின் உரிமையாளருக்கு பரிசு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இணையம் மூலம் 9699 காளைகள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 1000 காளைகள் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படுகின்றன.

குறிப்பாக போட்டிகளில் நாட்டு இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றைப் பரிசாக வென்ற விஜய் என்ற மாடுபிடி வீரர், இனி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

காலை 8 மணி முதல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கெடுப்பதற்குச் சுமார் 900 மாடுகள் வந்துள்ளன. அவற்றைப் பிடிப்பதற்கு 335 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். ஒரு சுற்றுக்கு 25 வீரர்களுக்கு அனுமதி. ஒரு சுற்று என்பது 45 நிமிடங்கள்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்ற பிறகே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

போட்டி தொடங்கியவுடன் முதலில் வாடிவாசலில் இருந்து பாலமேட்டில் உள்ள கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கக்கூடாது என்பது வழக்கம். போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கும் காளைகளுக்கும் கார், பைக், சைக்கிள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

போட்டியின்போது வெளியே சீறிப்பாய்ந்த ஒரு காளையை மிகுந்த வீரத்தோடு ஒரு மாடுபிடி வீரர் திமிலைப் பிடித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் துள்ளிக் குதித்து அவரை விலக்கிவிடப் போராடிய காளை, ஒரு சுற்றாகச் சுழன்று அவரைக் கீழே வீசிவிட்டுப் பறந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: திமிலை பிடித்த வீரரை சுழற்றி வீசிய காளை

மாடு முட்டி உயிரிழப்பு

மாடு முட்டியதில் உயிரிழந்த அரவிந்த்ராஜன்

பட மூலாதாரம், Madurai PRO

படக்குறிப்பு, மாடு முட்டியதில் உயிரிழந்த அரவிந்த்ராஜன்

பாலமேடு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு 9 மாடுகளைளைப் பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன், மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அரவிந்த்ராஜன் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையாளர் அரவிந்த், மாடு முட்டியதில் உயிரிழந்தார். இவர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்திருந்த நிலையில், மாடு முட்டி உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: