பிரதமர் மோதி குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே பிபிசி பேட்டியில் கூறியது என்ன?
"பிரதமர் நரேந்திர மோதிக்கு ‘எம் வார்த்தைகள்’ மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் முஸ்லிம்கள், மட்டன், மங்களசூத்ரா (தாலி) என்று தொடர்ந்து பேசுகிறார்," என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
பிபிசி உடனான நேர்காணலில், "மோதி அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருவகின்றனர், இதன் காரணமாக இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்,” என்றும் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் தற்போது 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டன. அவருடனான இந்த உரையாடல் நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதுவரையிலான தேர்தல் சூழலைப் பார்க்கும்போது, மோதி அரசுக்கு எதிராக மக்களே தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனவே இம்முறை இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



