You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடாவில் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களின் கனவு சிதைவது எப்படி?
கனடாவில் உயர் கல்வி பயிலும் பல இந்திய மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள் அதேநேரம், பல இளைஞர்கள் போலி முகவர்கள் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.
பஞ்சாபிலிருந்து கனடாவுக்கு செல்ல சுமார் 19 லட்சம் ரூபாயை சஹஜ்பிரீத் சிங் செலவு செய்துள்ளார். ஆனால், கடந்த நான்கு மாதங்களில் ஒருமுறை கூட அவர் கல்லூரிக்கு சென்றதில்லை.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் கனடாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாணவர்களும் நான்காம் இடத்தில் நைஜீரியாவை சேர்ந்தவர்களும் உள்ளனர்.
ஆனால் கடந்த ஓராண்டில் நேபாளத்தில் இருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இங்கு வரும் பல மாணவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளனர். இதுகுறித்து பலரும் பேசும் விஷயங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)