You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வக்ஃப் என்றால் என்ன? அதன் சொத்துகள் குறித்து சட்டத் திருத்தம் சொல்வது என்ன?
புதிய வக்ஃப் சட்டத் திருத்தம், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று (ஏப்ரல் 16) விசாரித்தது.
இந்த விசாரணையில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் பிற பதில் மனுதாரர்களின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப இடைக்கால உத்தரவு பிறக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாகவும், இன்று (ஏப்ரல் 17) மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தச் சட்டம் அரசமைப்புக்கு எதிரானது, முஸ்லிம்களின் சொத்துகளைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அதேநேரம் இந்தச் சட்டம் வக்ஃபில் சீர்திருத்தத்தையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் என்று பாஜக அரசு கூறுகிறது. அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது?
விரிவாக காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு