You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'காதலிப்பது ஒன்றும் குற்றம் இல்லை' - சாதி கட்டுப்பாட்டைக் கடந்து திருமணம் செய்தவர்களின் காதல் கதை
சாதிக் கட்டுப்பாடுகளை கடந்து அகிலாவும் மதனும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். காதலிப்பது தெரிந்த உடன், அகிலாவை அவரது பெற்றோர் வீட்டுக் காவலில் வைத்திருந்தனர். எல்லா சவால்களையும் தாண்டி இன்று வெற்றிகரமாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
அகிலாவின் பெற்றோருக்கு விருப்பமான மருமகனாக தற்போது மாறியுள்ளார் மதன்.
'காதலிப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் இல்லை' என்கிறார் அகிலா.
சாதி ஆணவக் கொலைகளை கேள்விப்படும் போதெல்லாம் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
"பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலனை சிந்திக்க வேண்டும்" என இவர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் காதல் கதை காணொளியில்...
தயாரிப்பு: நித்யா பாண்டியன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: வில்ஃபிரட் தாமஸ்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)