You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி மரணம் - இரானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால் என்ன? - காணொளி
இரானின் இஸ்லாமியக் குடியரசின் உச்ச அதிகாரத்தை அடைவதற்கு அருகில் இருந்த இப்ராஹிம் ரைசி அதை அடைவார் என்று பரவலாகக் கருதப்பட்டது.
ஆனால், நிலை இப்போது முற்றிலும் வேறாகிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணம் அடைந்ததும், ஏற்கனவே நீண்டகாலமாக உடல்நிலை குன்றியிருக்கும் 85 வயதான இரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு அடுத்து யார் தலைவராக வருவார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இரான் அதிபரின் மரணம், இரான் கொள்கைகளின் திசைபோக்கையோ அல்லது இஸ்லாமியக் குடியரசின் மீதோ குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)