You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானுக்கு எதிராக இஸ்ரேல் மட்டும் இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்தது ஏன்?
இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கிக்கொண்ட போது, வெளிப்படையாக இந்தியாவுக்கு ஆதரவாக நின்ற ஒரே நாடு இஸ்ரேல் தான்.
இஸ்ரேலிய டிரோன்கள் மூலம் இந்தியா தாக்குவதாக பாகிஸ்தான் கூறியது. பெஹல்காமில் தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்கள் கழித்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோதியை தொலைபேசியில் அழைத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான முழு உரிமை இந்தியாவுக்கு உள்ளது என, இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தெரிவித்திருந்தார்.
பெரும்பாலும் அனைத்து உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் நடுநிலையாக காட்டிக்கொள்ள முயற்சித்த போது, இஸ்ரேல் மட்டும் இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்தது ஏன்?
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு