You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏழு மாதக் குழந்தை உயிருடன் இருக்க தேவைப்படும் ரூ.17 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி
டெல்லி மாடல் டவுன் பகுதியில் வசிக்கும் அஷ்மீன் கவுரின் மகள் ஜெய்ஷாவுக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்ற நோய் உள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு மரபணு நோய். இதனால் உடலின் தசைகள் படிப்படியாக பலவீனமடைவதால், நோயாளியால் நிற்கக் கூட முடியாது. மருத்துவர்களின் கூற்றுப்படி, இதன் சிகிச்சைக்கு 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி தேவைப்படுகிறது.
இந்த ஊசி குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் என்று டாக்டர் கூறியது முதலே பணத்தை ஏற்பாடு செய்வது எப்படி என்ற கவலை தொற்றிக் கொண்டதாக கூறுகிறார் ஜெய்ஷவின் தந்தை பவன்ஜோத் சிங்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற க்ரவுட் ஃபண்டிங்கின் உதவியைப் பெறுகிறார்கள் பெற்றோர். இதுவரை 3.14 கோடி வசூலித்துள்ளனர்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)