You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சுரங்கப் பாதையில் நடுவழியில் நின்று போன மெட்ரோ ரயில் - சென்னையில் என்ன நடந்தது?
காணொளி: சுரங்கப் பாதையில் நடுவழியில் நின்று போன மெட்ரோ ரயில் - சென்னையில் என்ன நடந்தது?
சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கிச் சென்ற மெட்ரோ ரெயில் சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றது.
இதனால், 10 நிமிடங்களுக்கும் மேலாக பயணிகள் மெட்ரோ ரயிலுக்கு உள்ளே இருந்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. பின், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தற்போது மெட்ரோ வழக்கம்போல் இயக்கப்படுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு