You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கும்பமேளாவில் உணவு, இடம் கொடுத்து உதவும் முஸ்லிம்கள்
பிரயாக்ராஜில் கும்பமேளாவுக்கு வருபவர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், தங்குவதற்கு இடம், உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி வருகின்றனர். போர்வைகள், விரிப்புகள் ஆகியவற்றை கொடுத்தும் உதவியதாக அவர்கள் கூறுகின்றனர்.
"இங்கிருக்கும் பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் யாத்ரீகர்களுக்காக உணவு விநியோகம் செய்து வருகின்றனர். தங்கள் வீடுகள் மற்றும் மார்க்கெட் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிட்டுள்ளனர்" என பிபிசி செய்தியாளர் சுமேதாபால் தெரிவிக்கிறார்.
"மக்கள் தங்குவதற்கும், கழிப்பறை செல்வதற்கும் பிரச்னைகளை எதிர்கொண்டனர். நான் நிற்கும் இடத்துக்குப் பின்னால், நீங்கள் பார்க்கும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் அனைவரும் தங்கள் வீடுகளை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டனர். அனைவரும் சேர்ந்து உதவி செய்தனர். அனைத்து சமூகத்தினரும் இணைந்து செயல்பட்டனர்." என கூறுகிறார் அஃப்தாப் அகமது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)