You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நைஜீரியா: கடத்தல் அச்சத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் மக்கள்
கடந்தாண்டு நைஜீரியாவில் பள்ளி ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட மாணவர்களுள் மரியம் அல்ஹசனும் ஒருவர். இதையடுத்து, நைஜீரியாவிலிருந்து இடம்பெயர மரியமின் தந்தை முடிவெடுத்துள்ளார்.
இது, கடந்தாண்டு குரிகா எனும் பகுதியில் உள்ள ஆரம்பநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலிருந்து 137 மாணவர்கள் கடத்தப்பட்ட பின்பு நிலவிய சூழல்.
இப்போதைக்கு மரியம் மற்றும் மற்ற குழந்தைகளும் இஸ்லாமிய கல்வியை பெற்றுவருகின்றனர்.
தாக்குதல்களுக்குப் பிறகு பள்ளிகளை அரசாங்கம் புனரமைத்தது. ஆனால், எட்டு மாதங்களாக பள்ளிகளை மூடியது.
நைஜீரியாவில் குறைந்தது ஒரு கோடியே 81 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லாத நிலையில் உள்ளனர், உலகளவில் இந்த எண்ணிக்கை இங்குதான் அதிகமாக உள்ளது. இவர்களுள் அதிகமானோர் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள். பாதுகாப்பின்மை மற்றும் வறுமை ஆகியவை இதற்கான சில காரணங்கள். கடுனா பகுதியில் 300க்கும் அதிகமான பள்ளிகள் பாதுகாப்பின்மை காரணமாக வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)