You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்; வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுச்சேரி- காணொளி
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது 70-80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 90 கிமீ வேகத்திலும் காற்று வீசியது. புதுச்சேரியில் 46 செமீ மழை பதிவான நிலையில், தற்போது பல பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது.
''மாவட்ட நிர்வாகம் புயலை தாக்கத்தை எதிர்கொள்ள தேவையை நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம்கள் உள்ளன. இதற்காக சுமார் 4000 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)