You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முடி திருத்தும் கடை, டீக்கடையில் பாகுபாடு - கோவில் பிரவேசத்திற்குப் பிறகு அடக்குமுறையை சந்திக்கும் தலித் மக்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் 2023-ஆம் ஆண்டு பட்டியலின மக்கள் முதன்முறையாக அங்குள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தங்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டினார்கள். அதனைத் தொடர்ந்து பட்டியலின மக்கள் மற்றும் பட்டியலினம் அல்லாதோர் இடையே பதட்டமான சூழல் நிலவியது. தற்போது பட்டியலினம் அல்லாத சமூகத்தினர் தங்களுக்கென சொந்தமாக கோவில் ஒன்றை கட்டியெழுப்பியுள்ளனர்.
கோவிலில் வழிபாடு நடத்திய பிறகு, தங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர் அந்த பகுதியில் வாழும் பட்டியலின மக்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?
முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு