You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இரான் சிறப்பாக செயல்பட்டது' - இஸ்ரேல் உடனான மோதல் பற்றி டிரம்ப் கருத்து
கடந்த ஜூன் 13-ஆம் தேதி அன்று இஸ்ரேல் திடீரென இரான் மீது தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதலைத் தொடர்ந்து இரான் பதில் தாக்குதலை நடத்தி மத்திய கிழக்கில் ஒரு முழு நீள போருக்கான பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது போர் நிறுத்த நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இரானின் மோதல் குறித்து நெதர்லாந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
"இது இரான் உட்பட எல்லாருக்குமான மாபெரும் வெற்றி என நினைக்கிறேன். இரானுக்கென்று ஒரு நாடு இருக்கிறது. எண்ணெய் வளம் இருக்கிறது. அவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களால் மீண்டெழ முடியும். கடைசி இரண்டு நாட்களில் இஸ்ரேல் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டது.
பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நிறையக் கட்டடங்களை அழித்துவிட்டார்கள். இரான் அருமையாகச் செயல்பட்டது. நெதன்யாகுவும் தன்னைப் பற்றி பெருமையாக உணரலாம். அவர்கள் உண்மையில் சிறந்தவர்கள். ஆனால் அவர்கள் நீண்ட காலத்திற்கு வெடிகுண்டுகள் உருவாக்கப் போவதில்லை," என்று அவர் பேசியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு