You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது' - ஹிமான்ஷி நர்வால் கோரிக்கை
பஹல்காமில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் பேட்டியளித்துள்ளார்.
பஹல்காமில் உள்ள பைசரனில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உயிரழந்தார். அவரின் மனைவி ஹிமான்ஷி நர்வால் இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார்.
எனது கணவர் பாதுகாப்பு வீரராக இருந்தார். நம் நாட்டினர் அனைவரும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்பினார் எனத் தெரிவிக்கிறார் ஹிமான்ஷி நர்வால்.
இதோடு நின்றுவிடாமல் பயங்கரவாதத்தின் முடிவுக்கு இது ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு