You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கந்தல் துணிகளை காகிதங்களாக மாற்றும் இந்தியாவின் 'காகித கிராமம்'
மகாராஷ்டிராவில் உள்ள காக்சிபுரா எனும் கிராமம் தனித்துவமான காகித உற்பத்திக்காக அறியப்படுகிறது. காக்சிபுரா என்பதற்கு காகித நகரம் என்று பொருள். காக்சிபுராவில் வந்து குடியேறிய எல்லா மக்களுக்கும் காகிதம் தயாரிக்க மட்டுமே தெரியும். முகமது-பின்-துக்ளக் காலத்தில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீடுகளில் காகிதம் தயாரித்ததாகக் கூறுகின்றனர்.
காகிதி மொஹல்லாஸ் எனப்படும் காகித தயாரிப்பு பகுதிகள், காகிதி பஸ்தி எனப்படும் காகித தயாரிப்பு காலனிகளை நாம் காண்கிறோம். ஆனால் அவை இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. இன்றைய சூழலில் நாம் காண்பதில், மிகப்பெரியதில் காக்சிபுராவும் ஒன்று.
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஏழு மில்லியன் டன்களுக்கும் அதிகமான ஜவுளிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதனால் உலகளாவிய மொத்த ஜவுளிக்கழிவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
700 ஆண்டுகளாக, காக்சிபுரா கைவினை கலைஞர்கள், வீணான துணிகளை கையால் செய்யப்பட்ட காகிதமாக மாற்றுவதன் மூலம் இந்தப் பிரச்னையை நிவர்த்தி செய்துள்ளனர். 14ஆம் நூற்றாண்டு முதல் இங்கு காகிதம் தயாரிக்கப்படுகிறது. முகமது-பின்-துக்ளக்கின் ஆட்சிக் காலத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
காக்சிபுரா 19ஆம் நூற்றாண்டு வரை அரசு நிர்வாகத்துக்கான காகிதம் வழங்கும் நகரமாக அதன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டது. மேலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் அரச குடியிருப்புகளுக்கும் நிர்வாகப் பிரிவுகளுக்கும் கையால் செய்யப்பட்ட காகிதத்தை வழங்கும் மிகப்பெரும் விநியோகிப்பாளராகவும் இருந்தது. காக்சிபுராவின் தனித்துவம் குறித்து இந்த காணொளியில் காணலாம்.
------------------------------------------------------------------------------------------------
செய்தியாளர் - நிதின் சுல்தானே
ஒளிப்பதிவு & படத் தொகுப்பு - டேனிஷ் ஆலம்
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு