எஸ்சிஓ மாநாடு: இந்தியா - பாகிஸ்தான் உறவில் உள்ள இறுக்கத்தை குறைக்க உதவுமா?
இறுக்கமான முகத்துடன் வணக்கம் வைத்து, அரை மனதுடன் தலையசைத்து, தங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதைப் போல் இரு நாட்டின் பிரமுகர்கள் விலகி நிற்கிறார்கள்.
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோர் சந்தித்த காட்சியை மேற்கூறியவாறு விவரிக்கலாம்.
முழு சந்திப்பும் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. ஆனால் அப்போது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம், அடிக்கடி மோதிக்கொள்ளும் இரண்டு அணுசக்தி அண்டை நாடுகளுக்கு இடையிலான கசப்புணர்வை விவரித்தது. வார்த்தை மோதலும் நடந்தது.
பலதரப்புக் கூட்டங்களில் அடிக்கடி நிகழும் இந்தியா-பாகிஸ்தான் அரசியல் மோதலின் ஓர் உன்னதமான காட்சி அது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



