You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியா: கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய முடிவா?
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் பல திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஃபால்ஸ் கில்லர் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படும் அந்த உயிரினத்தை மீண்டும் கடலில் விடும் முயற்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கினார்கள்.
ஆனாலும், திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விடும் பணிகளை ஆராய்ச்சியாளர்களும் விலங்கு நல ஆர்வலர்களும் மேற்கொண்டனர். ஆனால் திமிங்கலங்களால் மீண்டும் கடலுக்குள் செல்ல இயலவில்லை.
ஆனால், அங்கே நிலவும் சூழல் காரணமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்களை காப்பாற்றுவது கடினம் என்பதால் அவற்றை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் இதைக் கூற காரணம் என்ன? முழு தகவல்களும் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)