You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான பிரேரணை 46 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன. எதிராக 122 வாக்குகள் கிடைத்தன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. புதன்கிழமை காலையில் ஆரம்பமான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் வாக்கெடுப்புடன் இரவு முடிவுக்கு வந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக்கட்சிகள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்களித்தன.
மஹிந்த ராஜபக்ஷ கட்சியான பொதுஜன பெரமுன, மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் மற்றும் ஏனைய சிலரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு பலத்தினாலேயே இந்த நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணையில் இருந்து பிரதமர் தப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- காளை வளர்ப்பில் லாபமீட்டும் கிராமத்து பெண்ணின் வெற்றிக்கதை #BBCShe
- காங்கிரஸ், அதிமுக, திமுக, பாஜக அல்லாத கட்சிகள் நெருக்கடி தர வேண்டும்: வேல்முருகன்
- வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? போராட்டங்கள்தான் தீர்வா?
- ஐ.பி.எல். போட்டி சென்னையில் கூடாது: 5 கட்சிகள் வலியுறுத்தல்
- அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்