ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப் பிரியாவிடை - உணர்ச்சிமயமான இறுதி நிகழ்வு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இறுதிப்பிரியாவிடை கொடுக்கப்பட்டது.
முன்னதாக, ராணியின் உடலுடன் புறப்பட்ட இறுதி ஊர்வலம் முதலாவதாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நின்றது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மதக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பிறகு இறுதிப் பயணம் வின்ட்சர் கோட்டையை நோக்கிச் சென்றது. அங்கு ராணியின் குடும்ப உறுப்பினர்கள் இறுதிப் பிரியாவிடை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பட மூலாதாரம், PA Media
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்கு இந்த நாட்டில் நடந்தது. அப்போது நிலவிய அதே உணர்ச்சிமயம் இந்த நாளில் காணப்படுகிறது.
ராணியின் வாழ்க்கை வரலாற்றை சுமக்கும் தகவல்கள் தொடர்பான கட்டுரைகளில் சில, உங்கள் பார்வைக்கு



