யுக்ரேனிய நகரங்களில் ஊரடங்கு: தொடரும் தாக்குதல் - தவிக்கும் தமிழக மாணவர்கள்

"இந்திய அரசு சொல்வதுபோல் எல்லைக்குச் செல்ல வேண்டுமெனில் நாங்கள் சுமார் 800 கி.மீ பயணிக்க வேண்டும். இந்தச் சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை"

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இன்றைய நேரலை முடிவடைகிறது - ஞாயிற்றுக்கிழமை நேரலை இணைப்பு கீழே

    பிப்ரவரி 26, சனிக்கிழமை வெளியான யுக்ரேன் போர் தொடர்பான நேரலைப் பக்கம் முடிவடைந்தது. தொடர்ந்து யுக்ரேனில் நடப்பவை குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் புதிய நேரலைப் பக்கத்தில் எங்களோடு இணையுங்கள்.இதுவரை நடந்த நிகழ்வுகளின் செய்தித் துளிகள் இதோ...

    • யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சக் டிம்ட்ரோ குலேபா, ரஷ்ய பிரதேசத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய தனது அரசு உத்தேசித்துள்ளது என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
    • ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் அவர்களிடம் இருந்து வீடுகளையும் வீதிகளையும் பாதுகாக்கவும் அவர்கள் வீட்டிலேயே பாட்டில்கள் மூலம் நெருப்புக் குண்டுகளைத் தயாரித்திருக்கிறார்கள்.
    • ரஷ்ய படைகள் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் முன்னேறியதாக பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • கீயவ் நகரத்தின் மேயர் சனிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளார்.
    • யுக்ரேன் எல்லையில் நாட்டை விட்டுத் தப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் 27 மணி நேரமாகக் காத்திருக்கின்றனர்.
    • ஜெர்மனி 1,000 டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் யுக்ரேனுக்கு அனுப்பவுள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
    • பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தடை செய்யப்பட வேண்டிய ரஷ்ய அரசியல் செல்வாக்கு மிகுந்த பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியலைத் தயாரித்துள்ளார் என்று தி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
    • தமிழக மாணவர்கள் சிலர் க்ரைமியாவுக்கு அருகில் இருக்கும் மிகொலயேவ் நகரத்திலுள்ள பெட்ரோ மொஹைலா ப்ளாக் சீ தேசிய பல்கலைக்கழகத்தின் அடித்தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் காலையில் மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. "என்ன செய்வது என்றே தெரியவில்லை" - யுக்ரேனில் தவிக்கும் தமிழக மாணவர்கள்

    இந்திய மாணவர்கள் சிலர் க்ரைமியாவுக்கு அருகில் இருக்கும் மிகொலயேவ் நகரத்திலுள்ள பெட்ரோ மொஹைலா ப்ளாக் சீ தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திவாகரிடம் பேசினோம்.

    திவாகர், நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவர் சற்று நேரம் முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, “நாங்கள் இருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

    நேற்று முதல் நாங்கள் எங்கள் விடுதியின் அடித்தளத்தில் தான் இருக்கிறோம். இங்கு மின் விளக்கு, ஹீட்டர் என்று எதுவுமே இல்லை. இப்போது எங்களிடம் இருக்கும் உணவு 3 நாட்களுக்குத் தான் தாக்குப் பிடிக்கும். அது முடிந்த பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

    பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு சொல்கிறார்கள். ஆனால், அவை எங்கு உள்ளன என்று எந்த விவரமும் தெரியவில்லை.

    போர் தொடங்கி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதுவரைக்கும் எங்கள் நாட்டிற்குத் திரும்புவது என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டேயிருக்கிறது. இந்திய அரசு சொல்வதுபோல் எல்லைக்குச் செல்ல வேண்டுமெனில் நாங்கள் சுமார் 800 கி.மீ பயணிக்க வேண்டும். இந்தச் சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை,” என்று கூறினார்.

  3. நாட்டுக்காகச் சண்டையிட வரிசை கட்டி நிற்கும் பொதுமக்கள், லைஸ் டூஸே, சர்வதேச தலைமை செய்தியாளர்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Tony Brown

    சமீப வாரங்களில் நேட்டோ படைகளிடமிருந்து கீயவ் மற்றும் உக்ரைனில் உள்ள பிற இடங்களுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    ஆனால் தரையில் நேட்டோ படைகள் இல்லை. சண்டை என்று வரும்போது, யுக்ரேனியர்களே சண்டையிடுகிறார்கள் என்று அதிபர் அடிக்கடி கூறியதை மக்களும் உணர்கிறார்கள்.

    தன்னார்வத்தோடு இந்தச் சண்டையில் பங்கெடுக்க பதிவு செய்யக்கூடிய இந்த அலுவலகங்களில் ஒன்றை நாங்கள் எப்போது கடந்து சென்றாலும், இதுபோன்ற நீண்ட வரிசை இருக்கும்.

    வெள்ளிக்கிழமை மாலை அத்தகைய ஓர் அலுவலகத்தைப் பார்த்தோம். இந்தத் திறந்தவெளி முற்றத்தில் ஏராளமான ஆண்கள், தங்கள் கடவுச் சீட்டைக் காட்டி கைகளில் டேப்பை சுற்றிக் கொண்டு வருகிறார்கள்.

    ஏறக்குறைய எந்த போர் அனுபவமும் இல்லை. இருப்பினும் அவர்களின் தெருக்களை, தங்கள் குடும்பங்களை, தங்கள் நாட்டைப் பாதுகாக்க தீர்மானத்தோடு வருகிறார்கள்.

  4. ரஷ்ய பெரும் பணக்காரர்களை எச்சரிக்கும் பிரிட்டன் வெளியுறவுச் செயலர்

    பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் தடை செய்யப்பட வேண்டிய ரஷ்ய அரசியல் செல்வாக்கு மிகுந்த பெரும் பணக்காரர்களின் புதிய பட்டியலைத் தயாரித்துள்ளார் என்று தி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    விளாதிமிர் புதினின் ஆட்சியுடன் தொடர்புடைய பெரும் பணக்காரர்களில் பலர் வரவுள்ள வாரங்களில் அவர்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்று லிஸ் டிரஸ் கூறுகிறார்.

    "நாங்கள் உங்கள் பின்னால் வருவோம். எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது" என்று அவர் அவர்களை எச்சரித்ததாக அந்த செய்தித்தாள் கூறுகிறது.

  5. ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் யுக்ரேனுக்கு அனுப்பும் ஜெர்மனி

    ஜெர்மன்

    பட மூலாதாரம், Getty Images

    ஜெர்மனி 1,000 டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் யுக்ரேனுக்கு அனுப்பவுள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

    மோதல் நிகழும் பகுதிகளுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்யும் அதன் நீண்டகால கொள்கையில் பெரிய மாற்றத்தை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

    “இந்தச் சூழ்நிலையில், விளாதிமிர் புதினின் ராணுவத்திற்கு எதிராக யுக்ரேனை பாதுகாப்பதில் எங்களால் முடிந்தவரை ஆதரவளிப்பது எங்கள் கடமை,” என்று ஜெர்மன் அரசுத் தலைவர் ஓலோஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

  6. ரஷ்ய படையெடுப்பு விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

    • ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து 115,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது யுக்ரேனில் இருந்து போலந்திற்குள் எல்லையைக் கடந்து சென்றுள்ளனர் என்று போலந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
    • ரஷ்ய படைகளுடன் போரில் ஈடுபட தனது வீரர்களை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யாவின் ஒரு பகுதியான செச்னியாவின் தலைவர் கூறியுள்ளார்.
    • தலைநகர் கீயவில், ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகள் ஒரே இரவில் நடந்தன. ஆனால், யுக்ரேனிய படைகள் நகரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் தக்க வைத்துள்ளன.
    • விளாதிமிர் புதினின் படைகள் கீயவ் நகர மையத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • கீயவில் உள்ள முக்கிய அரசாங்க மாவட்டங்களுக்குள் ஊடுருவுவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சி தோல்வியடைந்த பின்னர் ரஷ்ய படைகள் இப்போது மீண்டும் ஒருங்கிணைந்து கொண்டிருக்கலாம் என்று ரூசி சிந்தனைக் குழுவின் ராணுவ நிபுணர் ஜேக் வாட்லிங் பிபிசியிடம் கூறினார்.
    • யுக்ரேனின் இரண்டாவது நகரமாகக் கருதப்படும் கிழக்கு நகரமான கார்கிவில், ரஷ்ய தாக்குதலை யுக்ரேனிய படைகள் முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஷெல் தாக்குதல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நகரத்திற்குள் உலவ வேண்டாம் என்று குடிமக்களை எச்சரித்துள்ளனர்.
    • தெற்கு நகரமான ஒடெஸ்ஸாவிற்கு அருகிலும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • தென்கிழக்கு நகரமான மெலிடோபோலை கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. ஆனால், பிரிட்டன் இந்தக் கூற்றில் சந்தேகம் எழுப்பியுள்ளது.
    • வீவ் உட்பட மேற்கு மற்றும் மத்திய நகரங்கள் ஏவுகணை தாக்குதல்களுக்குக் குறி வைக்கப்பட்டதாக ஸெலன்ஸ்கி கூறினார்.
  7. நாட்டை விட்டுத் தப்பிக்க 27 மணிநேரமாகக் காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள்

    யுக்ரேனில் இருந்து தப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் 27 மணி நேரமாகக் காத்திருக்கின்றனர்.

    யுக்ரேன் எல்லையை நோக்கி அகதிகள் தொடர்ந்து ஓடுகிறார்கள்.

    பிபிசி செய்தியாளர் லூசி வில்லியம்சன் அண்டை நாடான மால்டோவாவின் எல்லையில் இருக்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. யுக்ரேன் தலைநகர் கீயவில் திங்கள் வரை ஊரடங்கு

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் உள்ளூர் நேரப்படி,சனிக்கிழமை மாலை 5 மணி முதல் கீயவ் நகர மேயர் விடலி க்ளிஷ்கோவால் விதிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் கீழ், தெருவில் காணப்படும் எந்தவொரு குடிமகனும், “எதிரிகளின் நாசவேலை மற்றும் உளவுக் குழுக்களின் உறுப்பினர்களாகக் கருதப்படுவார்கள்,” என்று அவருடைய ட்வீட் தெரிவிக்கிறது.

    ரஷ்ய படைகள் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் முன்னேறியதாக பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஆனால், அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நகரத்திலேயே இருக்கிறார். அதோடு அவருடைய அலுவலகத்தில் இருந்தும் படைகளுடன் இருந்தும் ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

  9. தங்கள் நகரத்தைப் பாதுகாக்க பாட்டில் குண்டுகளைத் தயாரிக்கும் பெண்கள், சார் ரெய்னஸ்ஃபோர்டு, கிழக்கு யுக்ரேனின் நிப்ரோ நகரில் இருந்து…

    பெண்கள்

    இந்த பெரிய யுக்ரேனிய நகரத்தின் மையத்தில், புல் தரையில் பெண்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதைக் கண்டோம். ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், அவர்களிடம் இருந்து வீடுகளையும் வீதிகளையும் பாதுகாக்கவும் அவர்கள் வீட்டிலேயே பாட்டில்கள் மூலம் நெருப்புக் குண்டுகளைத் தயாரித்திருக்கிறார்கள்.

    ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோர் அடங்கிய பெண்கள் கண்ணாடி பாட்டில்கள், கிழிந்த துணிகள் எரிபொருள்களுடன் சூழ்ந்திருந்தனர். "மிகவும் திகிலூட்டுவதாக" இருந்ததால், உண்மையில் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் இருக்க முயற்சிப்பதாக அவர்கள் கூறினர்.

    ஆனால் அவர்கள் எதற்கும் தயாராக இருக்க விரும்புகிறார்கள். இந்த நகரம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. ஆனால் இந்த போரின் தீவிரத்தை அது ஏற்கனவே உணர்ந்திருக்கிறது. ராணுவ மருத்துவமனையில் 400 படுக்கைகள் உள்ளன. அவை கிழக்கு யுக்ரேன் முழுவதிலும் இருந்து வந்த காயமடைந்த வீரர்களால் நிரம்பியிருக்கின்றன.

    இந்த நகர மக்கள் திரள்கின்றனர். ஆனாலும் இதை விரும்பிச் செய்யவில்லை என அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழியில்லை.

  10. ‘ஸ்விப்ட்’ பரிவர்த்தனை சேவையில் ரஷ்யாவுக்கு கட்டுப்பாடு விதிக்க ஜெர்மனி ஆதரவு

    ரஷ்ய வங்கி

    பட மூலாதாரம், TASS VIA GETTY IMAGES

    ஸ்விப்ட் எனப்படும் நாடுகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை சேவையில் ரஷ்யாவுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.

    "ஸ்விஃப்ட்டின் குறிவைக்கப்பட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாடு அவசியம்" என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் மற்றும் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

    "சரியான நபர்களை மட்டும் பாதிக்கும் வகையில்" இந்தக் கட்டுப்பாடுகளை எப்படி அமல்படுத்துவது என்பதில் அரசு செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலி மற்றும் ஹங்கேரி நாடுகள் ஏற்கெனவே இது தொடர்பான ஆதரவை தெரிவித்துவிட்டனர். இத்தகைய தடைக்கு ஜெர்மனி இதுவரை எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

  11. "ரஷ்யாவின் குற்றச்சாட்டு உண்மையில்லை"

    யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சக் டிம்ட்ரோ குலேபா, ரஷ்ய பிரதேசத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ய தனது அரசு உத்தேசித்துள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    கதிரியக்க பொருட்களுடன் வழக்கமான வெடிபொருட்களைச் சேர்க்கும் சாதனங்களோடு, ஆயிரக்கணக்கான மக்களை உடனடியாகக் கொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட வெடிகுண்டை ‘டர்டி பாம்ப்’ என்று அழைக்கின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அத்தகைய வெடிகுண்டை யுக்ரேன் தயாரிப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய தூதுவர் வசிலி நிபென்ஸியா கூறினார்.

    குலேபா செய்த ஒரு ட்வீட்டில் இந்த ஆலோசனையைக் கேலி செய்தார். அப்போது, “ரஷ்ய பிரசாரம் அதன் கட்டுப்பாட்டை இழந்து சென்றுகொண்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

  12. "ரஷ்ய படைகளின் வேகம் குறைந்துள்ளது" - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்

    “கடுமையான தளவாட சிக்கல்கள் மற்றும் வலுவான யுக்ரேனிய எதிர்ப்பின் விளைவாக, ரஷ்யர்கள் முன்னேறி வருவதன் வேகம் தற்காலிகமாகக் குறைந்துள்ளது,” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

    “ரஷ்ய படைகள் யுக்ரேனிய மக்களிடம் தங்குமிடங்களைக் கடந்து செல்லும்போது, அவர்களைச் சுற்றி வளைத்து தனிமைப்படுத்த படைகளை விட்டுச் செல்கின்றன,” என்று அதுகுறித்த ட்வீட் தெரிவிக்கிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    யுக்ரேனின் தலைநகரான கீயவைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் கூறுகிறது.

    மேலும், உக்ரைனின் தலைநகரான கிவ்வைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று அது மேலும் கூறுகிறது.

  13. கீயவின் ஒரு குடியிருப்பின் மீது ஏவுகணை தாக்குதல்

    இன்று காலையில் யுக்ரேனின் தலைநகரான கீயவில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சிசிடிவி படம் அந்தத் தாக்குதல் நடந்த தருணத்தைக் காட்டுகிறது.

    இச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை ஆனால் ஒரே இரவில் 35 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    கீயவின் ஒரு குடியிருப்பின் மீது ஏவுகணை தாக்குதல்

    பட மூலாதாரம், Reuters

  14. ஏவுகணை தாக்கிய குடியிருப்பில் இருந்த 2 பேர் உயிரிழப்பு

    கீயவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பைத் தாக்கிய ஏவுகணை குறித்து ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக யுக்ரேன் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.

  15. ரஷ்ய படைக்கு உதவ படைகளை அனுப்பிய செச்னியா

    ரஷ்ய படைக்கு உதவ படைகளை அனுப்பிய செச்னியா

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்ய படைகளுடன் போரில் ஈடுபட தனது வீரர்களை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்யாவின் ஒரு பகுதியான செச்னியாவின் தலைவர் கூறியுள்ளார்.

    இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ரம்ஜான் கதீரோஃப், செச்சென் படைகள் இதுவரை யுக்ரேனிய ராணுவ வளாகத்தை எந்த உயிரிழப்பும் இன்றி வெற்றிகரமாகக் கைப்பற்றியதாகக் கூறினார்.

    தெற்கு ரஷ்ய குடியரசின் தலைவர் ரஷ்ய அதிபரின் முக்கிய கூட்டாளி ஆவார்.

    படையெடுப்பை நியாயப்படுத்தும் அவர், யுக்ரேனை தாக்கும் புதினின் முடிவு, ரஷ்யாவின் எதிரிகள் அந்த நாட்டைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் என்றார்.

    கதிரோஃபுக்கு விசுவாசமான செச்சென் போராளிகள் ஒரு மோசமான நற்பெயரைக் கொண்டுள்ளார். அதோடு, அவர்மீது மனித உரிமை மீறல் சார்ந்த குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளனர்.

  16. "கீயவ் முழுக்க எங்குமே பாதுகாப்பு இல்லை", ஓர்லா குவெரின், யுக்ரேனிய தலைநகரில் இருந்து

    கீயவ் முழுக்க எங்குமே பாதுகாப்பு இல்லை

    கீயவ் இன்று மூச்சுத் திணறும் அளவுக்குப் பதற்றம் நிறைந்த நகரமாக உள்ளது.

    அடுக்குமாடி கட்டடத்தின் மீதான தாக்குதல் பேரழிவு தொடர்பான திரைப்படத்தில் வரக்கூடிய காட்சியைப் போல் இருந்தது. அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி கிழித்தெறியப்பட்டது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பது அதிசயமாக உள்ளது.

    “இது அதிசயம் இல்லை,” என்று உள்ளூர் மனிதரான யூரி என்னிடம் கூறினார். “பெரும்பாலான மக்கள் தங்குமிடங்களில் இருந்தனர் அல்லது ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்,” என்று அவர் கூறினார். இடிபாடுகளுக்கு நடுவே இயல்பு வாழ்க்கையின் எச்சங்களாக புத்தகம், ஒரு குழந்தையின் படம், விசைப்பலகை போன்றவை கிடந்தன.

    இந்த ஐரோப்பிய தலைநகரில், எங்கும் பாதுகாப்பாக இல்லை என்ற உண்மையான உணர்வு ஏற்படுகிறது.

    கீயவ் முழுக்க எங்குமே பாதுகாப்பு இல்லை
    கீயவ் முழுக்க எங்குமே பாதுகாப்பு இல்லை
  17. யுக்ரேனில் இருந்து மும்பை வந்து சேர்ந்த இந்தியர்கள்

    "யுக்ரேனில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் முகத்தில் புன்னகையைக் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது," என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. யுரேனிலிருந்து வரும் தமிழக மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும்

    யுக்ரேனிலிருந்து இந்தியா திரும்பும் மாணவர்களை டெல்லியில் சென்று வரவேற்பதற்காகவும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வீடு திரும்புவதற்கான செலவை தமிழக அரசே ஏற்று அதற்கான பயணச் சீட்டுகளை வழங்குவதற்காகவும் தமிழகத்திலிருந்து ஒரு குழு டெல்லி செல்ல உள்ளது.

    மாணவர்கள் எத்தனை பேருக்கு என்ன மாதிரியான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற முழு விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

  19. 115,000-க்கும் மேற்பட்ட மக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறினர்

    ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து 115,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது யுக்ரேனில் இருந்து போலந்திற்குள் எல்லையைக் கடந்து சென்றுள்ளனர் என்று போலந்து அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த நான்கு மணி நேரத்தில் மட்டும் 15,000 பேர் நாட்டிற்குள் நுழைந்ததாக உள்துறை அமைச்சர் பாவெ செபர்னேக்கர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    யுக்ரேனில் இருந்து வெளியேறும் மக்கள்
  20. தீவிரமடையும் யுக்ரேன் - ரஷ்யா மோதல்: இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது ஏன்?

    ரஷ்யா யுக்ரேன் மீது நடத்தும் தாக்குதலையும் யுக்ரேன் அதை எதிர்த்துப் போராடி வருவதையும் பற்றிய கள நிலவரத்தை பிபிசி தமிழ் பிரத்யேகமாக விளக்குகிறது.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு