கமல்ஹாசனுக்கு கொரோனா - இரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு

பெங் ஷாய் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர் தன் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் காணொளி அழைப்பு மூலம் கூறினார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இத்துடன் இன்றைய நேரலை முடிவடைந்தது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. அரியலூரில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி உயிருக்கு ஆபத்தான நிலையில் 9 மாத குழந்தை

    அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி கிராமம் மேலத்தெருவை சேர்ந்த காமராசு மனைவி செல்வி என்ற பெண் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். 9 மாத குழந்தை கமலேஷ் சிகிச்சைக்காக அரியலூர் அரசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை ஆடுகளை பிடித்து கட்டுவதற்காக செல்வி மற்றும் மகன் கலைச்செல்வன், பேரன் கமலேஷை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மண் சுவர் இடிந்து விழுந்ததில் செல்வி மற்றும் பேரன் கமலேஷ் சுவற்றின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டனர்.

    படுகாயம் அடைந்த செல்வி மற்றும் பேரன் கமலேஷ் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்வி தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது படுகாயமடைந்த குழந்தை கமலேஷ் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, சமூக ஊடகங்கள் மூலம் அரசை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை: எச்சரிக்கும் இலங்கை அரசு

    இலங்கையில் அரசின் கொள்கைகள் அல்லது செயல்பாடு தொடர்பாக சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி ஊழியர்கள் விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அரசு ஊழியர்களின் சமூக ஊடக பயன்பாடு தொடர்பாக ஆறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

    இலங்கை உள்துறை

    பட மூலாதாரம், SRILANKA HOME AFFAIRS

  4. ஐரோப்பா முழுவதும் பரவலாக வன்முறை: ஆஸ்திரியாவில் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்

    ஆஸ்திரியாவில் அதிகரிக்கும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து, பொதுமக்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்நாட்டில் நள்ளிரவு முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமலாகியுள்ளது.

    ஐரோப்பா முழுவதும் பரவலாக நடைபெற்று வரும் போராட்டங்களில், பொதுமக்கள் குறிப்பாக, கஃபே, உணவகங்கள், கேளிக்கை இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    மேலும், புத்தாண்டு நெருங்கும் நிலையில், பட்டாசுகள், வானவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் போராட்டக்காரர்கள் கோபமடைந்துள்ளனர்.

  5. "கொலைகாரர்களுக்காக பாடாதே"- ஜஸ்டின் பீபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம்

    செளதி

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, செளதியில் டிசம்பர் 5ஆம் தேதி பாடவிருக்கும் பிரபல பாப் நட்சத்திரங்களில் ஜஸ்டின் பீபரும் ஒருவர்.

    செளதி அரேபியாவில் திட்டமிடப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு, பிரபல தனி இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.வருகிற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெட்டாவில் நடைபெறும் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில், இசை நிகழ்ச்சி நடத்த உள்ள நட்சத்திரங்களில் கனடா நாட்டைச் சேர்ந்த பாடகர் ஜஸ்டின் பீபரும் ஒருவர்.கடந்த 2018ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த ஹாடீஜாஜெங்கிஸ், இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதன் மூலம் "ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்புங்கள்" என்று பீபருக்கு வெளிப்படையாக ஓர் கடிதம் எழுதியிருந்தார்.

    வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், "என் அன்புக்குரிய ஜமாலின் கொலைகாரர்களுக்காகப் பாடாதீர்கள்" என்று ஜெங்கிஸ் எழுதியுள்ளார்.

    ஒரு காலத்தில் செளதி அரசாங்கத்தின் ஆலோசகராகவும், அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டவர் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி. அரசின் மீதான நம்பிக்கையை இழந்ததால், செளதியில் இருந்து வெளியேறி 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு சென்று குடியேறினார். அப்போது முதல் செளதி அரச குடும்ப ஆளுகையின் தீவிர விமர்சகராக கருதப்பட்ட கஷோக்ஜி, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்தான்புல்லில் உள்ள அதன் தூதரகத்தில் மிகவும் கொடூரமாக உடல்கள் துண்டாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    ஹேட்டிஸ் உடனான திருமணத்துக்காக சில ஆவணங்களை பெறுவதற்காக அவர் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்துக்கு சென்றிருந்தபோது அவர் கொல்லப்பட்டார். அந்த நிகழ்வை தனது கடிதத்தின் வாயிலாக நினைவுகூர்ந்த ஹாடீஜாஜெங்கிஸ், விமர்சகர்களைக் கொல்லும் ஆட்சியின் நற்பெயரை மீட்டெடுக்க, உங்களுடைய பெயரும் திறமையும் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதைக் காட்ட கிடைத்த ஒரு "தனிப்பட்ட வாய்ப்பு" இது என்று கூறியுள்ளார்.

    இதே கோரிக்கையை செளதி அரேபிய மனித உரிமைகள் கண்காணிப்பகமும் முன்வைத்துள்ளது.செளதி அரேபியாவில் நிலவும் மனித உரிமை பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதாகக் கூறியுள்ள அந்த அமைப்பு, ஜஸ்டின் பீபர் உட்பட, அசாப் ராக்கி, டேவிட் கிட்டா, ஜேசன் டெருலோ ஆகிய பிற கலைஞர்களிடம், தங்கள் வருகையைத் தவிர்க்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளது.செளதி அரேபியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை ரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல.2019ஆம் ஆண்டில், ராப் இசைக் கலைஞர் நிக்கி மினாஜ், ஜெட்டாவில் திட்டமிடப்பட்ட தனது நிகழ்ச்சியை, பெண்கள் மற்றும் எல்ஜிபிடி உரிமைகளுக்கான ஆதரவைக் காரணம் காட்டி ரத்து செய்தார்.

  6. கன்னியாகுமரியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு ஆலோசனை, பிரபுராவ் ஆனந்தன்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகள், குடியிருப்பு பகுதிகள், விவசாயநிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகளை பார்வையிட மத்திய நிதித்துறை ஆலோசனை குழு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய நீர்வள ஆராய்ச்சி இயக்குநர் ஆர். தங்கமணி, மற்றும் மத்திய எரிசக்திதுறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, மற்றும் ஒருங்கிணைப்பாளராக மத்திய வருவாய் துறை மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் கொண்ட மத்திய குழு கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தனர்.

    இவர்களின் வருகையையொட்டி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட கண்காட்சியை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

    மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்உள்ளிட்ட அதிகாரிகளிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

    பின்னர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் ஆறுகள் குளங்கள் பயிர்சேதங்கள், உடைப்புகள் போன்றவற்றின் விவரங்களை புகைப்படங்களுடன் மத்திய குழுவினருக்கு விளக்கினார்.

    மேலும் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    இதே போன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர் நேரில் சந்தித்து மனுக்கள் அளித்தார்.

    இதனை தொடர்ந்து வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள பிள்ளைபெத்தான் அணைக்கட்டு, நுள்ளிவிளை மற்றும் குமாரகோவில் சானல் கரைகளில் ஏற்பட்ட உடைப்பு, வைக்கலூர், பார்த்திப புரம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ள பாதிப்பு என 10 இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  7. கன்னியாகுமரியில் சிறுவனுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது, பிரபுராவ் ஆனந்தன்

    9 வயது சிறுவனை மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த மீனவரை கொல்லங்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சைமன் (48). மீனவரான இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுவனை பல நாட்களாக மிட்டாய் வாங்க பணம் தருவதாக கூறி தனியாக வரும்படி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சனிக்கிழமை மாலை சிறுவன் வீட்டின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி விட்டு தனிமையல் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சைமன் சிறுவனை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று அருகில் உள்ள ஒரு தோப்பிற்குள் வைத்து பாலியல் தொந்தரவு (ஓரினசேர்க்கை) செய்துள்ளார்.

    இது குறித்து சிறுவன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றறோர் சிறுவனை அழைத்து சென்று கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சைமநன பிடித்த நடத்திய விசாரணை செய்தனர். அதில் சைமனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்றும் தனக்கு பல நாட்களாக இந்த சிறுவன் மீது ஆசை உள்ளதாகவும் அவனை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்று மிட்டாய் வாங்கி கொடுத்து ஆசைக்கு இணங்க வைக்க முயன்றதாகவும் தெரிகிறது. அது முடியாமல் போக ஆத்திரத்தில் சிறுவனை கடத்தி சென்று பாலியல் இச்சைக்கு உட்படுத்தியதாக அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் கொல்லங்கோடு போலீசார் சைமனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

  8. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தம்பதிகள் தீக்குளிக்க முயற்சி, பிரபுராவ் ஆனந்தன்

    திருட்டுப்போன 20 பவுன் தங்கநகையை மீட்டுத் தரவும், சொந்த இடத்தை முறையாக அளவீடு செய்து தரக் கோரியும் அடுத்தடுத்து இருவேறு தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கண்ணன்குளம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார், பைக் மெக்கானிக் கடை நடத்தி வரும் இவரது வீட்டில் கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி 20 பவுன் தங்க நகை திருடு போயுள்ளது.

    இது குறித்து பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன் வீட்டிற்கு அருகே வாடகைக்கு குடியிருக்கும் ஒரு பெண் தனது வீட்டிற்கு அடிக்கடி வருவார் என்றும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதனை தொடர்ந்து அவர்களை ஆள் வைத்து நான் அடித்ததாக என் மீது புகார் கொடுத்தனர். என் மீது பொய் புகார் கொடுத்த அவர்கள் அன்றே கண்ணன் குளத்தை உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு கூடன்குளம் பகுதிக்கு வாடகைக்கு குடியேறி விட்டனர்.

    ஆனால் அந்த பெண் தான் நகையை திருடி உள்ளார், அவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவரிடம் விசாரணை செய்ய முடியாது என காவல்துறையினர் மறுத்து வருகின்றனர்.

    பழவூர் காவல் நிலையத்தில் நகை காணமல் போனது தொடர்பாக அளித்த புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வள்ளியூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம். ஆனால் தற்போது வரை காணாமல் போன நகையை மீட்டு தரவும், திருடுபோன நகை குறித்த புகார் மீது எந்த முறையான பதிலும் இல்லை எனவும் கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்வகுமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர்.

    இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மண்ணெண்ணை கேனை மீட்டனர். மேலும் செல்வகுமார் தம்பதியினரிடம் புகார் எழுதி வாங்கியதோடு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க அழைத்து செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அதே போல அம்பாசமுத்திரம் அருகே அடைய கருங்குளத்தை சேர்ந்த முதிய தம்பதியர் தனது சொந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே தனது நிலத்தை முறைப்படி சர்வேயர் மூலம் அளக்க மனு அளித்தும் கடந்த 2 ஆண்டு காலமாக அளவீடு செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதோடு தங்களை அலைகழித்து வருகின்றனர் என கூறி, இதனால் மனமுடைந்த முதிய தம்பதியினர் வேறு வழியின்றி தீக்குளிக்கும் முயற்சியோடு ஆட்சியர் அலுவலகம் வந்தனர், இதனை அறிந்த காவல்துறையினர் அவர்கள் பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் விசாரணை செய்து ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.

  9. கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளார்.

    அமெரிக்கப் பயணம் முடித்துவிட்டுத் திரும்பிய பிறகு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதன செய்ததில கோவிட் தொற்று உறுதியானதாகவும் அவர் கூறியுள்ளர்.

    தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியிருக்கும் கமல்ஹாசன், இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    கதராடைகளுக்கான ஷோரூம்களை திறப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் கடந்த வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அதன் பிறகு இரு நாள்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    ஏற்கெனவே இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை அவர் போட்டுக் கொண்டிருக்கிறார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  10. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை: முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம், யூ.எல். மப்றூக்

    இலங்கை
    படக்குறிப்பு, ரஊப் ஹக்கிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

    இலங்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஆதரிப்பதில்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

    இன்று (21) நடைபெற்ற அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியுள்ளார்.

    முஸ்லிம் காங்கிரஸின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மட்டுமே இந்த உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    உயர்பீட கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு உடல்நலமில்லை என அறிவித்துள்ளதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

    முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியின் அமைப்பாளர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் மட்டுமே, வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட இன்றைய உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே இந்த அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் அந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

    அதேபோன்று அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஆதரவாக வாக்களித்திருந்த போதிலும், அந்தக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமையும், சிலர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.

    2022ஆம் ஆண்டுக்கான மேற்படி வரவு - செலவுத் திட்டம் கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளைய (22) தினமும், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கிய இந்திய குடியரசு தலைவர்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய எல்லைக்குள் நுழைந்த போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பிறகு அந்நாட்டு எல்லைக்குள் சிக்கி பிறகு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக அபிநந்தன் வர்தமானுக்கு பாதுகாப்புத் துறையின் உயரிய விருதான வீர் சக்ரா வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருதையும் பாராட்டுப் பத்திரத்தையும் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி பாகிஸ்தானின் எஃப்16 ரக போர் விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன். அந்த ஆண்டு புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளுக்கு இடையே நடந்த வான்வழி மோதலில், விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் வர்தமான், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்துடன் சண்டையிட்டார்.

    அதில் பாகிஸ்தானிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே சமயம், அபிநந்தனின் விமானமும் சுடப்பட்டது. இதையடுத்து பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லையில் குதித்த அவர் அங்குள்ள எல்லையோர கிராமத்தில் சிக்கினார். உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டு பிறகு அந்நாட்டு ராணுவத்தினரால் அவர் சிறைப்பிடிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து இந்திய அரசு நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் இந்தியாவின் அட்டாரி எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். நாட்டை பாதுகாக்கும் பணியில் தீரத்துடன் சண்டையிட்டதற்காக அவரது பெயர் வீர் சக்ரா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி குரூப் கேப்டன் ஆக அபிநந்தன் பதவி உயர்வு பெற்றார்.

    அபிநந்தன் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில்1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பிறந்தார். 2004ஆம் ஆண்டுஇந்திய விமானப்படையில் விமானியாக பணியமர்த்தப்பட்டார். இவரது தந்தை சிம்மகுட்டி வர்த்தமான் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாயார் மருத்துவர்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, திருச்சி உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 வயது சிறார் உள்பட மூன்று பேர் கைது, ஜி.மணிவண்ணன், திருச்சி

    எஸ்ஐ கொலை

    பட மூலாதாரம், BHOOMINAHAN

    படக்குறிப்பு, பூமிநாதன்

    திருச்சியில் ஆடு திருடர்கள் என கருதப்படும் சிலரால் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாக 10 வயது சிறார் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறியது: திருச்சி மாவட்டம் திருவரம்பூருக்கு உட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) நேற்று முன்தினம் இரவு ரேந்துப் பணியின்போது பூலாங்குடி காலனி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஆடுகளை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்தவர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்த முயன்றுள்ளார்.

    ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால் பூமிநாதனும் தமது இரு சக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்துள்ளார்.

    கீரனூர் பள்ளத்துப்பட்டி மணிவிஜய் நகர் ரயில்வே பாலம் அருகே மூவரும் இருந்த வாகனத்தை மறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர்களில் 19 வயது மணிகண்டன் என்பவர் தன்னுடன் இருந்த இரு சிறார்களுடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை சரமாறியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆடு திருடிய சம்பவம் குறித்து மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் அவர்கள் பிடிபட்ட இடத்துக்கு வந்தபோது பூமிநாதன் கொல்லப்பட்டதை பார்த்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் கீரனூர் காவல்நிலையத்தில் பூமிநாதன் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை செய்த நபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களின் தேடுதல் நடவடிக்கையில், மணிகண்டன், இரண்டு சிறார்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட மூன்று நபரில் ஒருவர் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர் என்பதும், மற்றொருவர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதும் தெரியவந்துள்ளது.அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    நவல்பட்டு காவல் நிலையம்

    பட மூலாதாரம், NAVALPATTU PS

  13. ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய்

    pengshaw

    பட மூலாதாரம், Getty Images

    சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் (35 வயது) தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், தன் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சிடம் காணொளி அழைப்பு மூலம் பேசிய போது கூறினார்.

    சில வாரங்களுக்கு முன், சீனாவின் துணை பிரீமியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் பாதுகாப்பாக உள்ளாரா என பல்வேறு பிரபலங்களும் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சீன அரசு ஊடகம் இரு காணொளிகளை வெளியிட்டது.

    நவம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாச்சிடம் காணொளி அழைப்பு மூலம் சுமார் 30 நிமிடம் பேசினார் பெங் ஷூயேய். ஒலிம்பிக் கமிட்டி தன் பாதுகாப்பை குறித்து அக்கறை செலுத்தியதற்கு நன்றி கூறினார் பெங் ஷாய்.

    மேலும் தான் பெய்ஜிங்கில் தன் குடும்பத்தினரோடு இருப்பதாகவும், இப்போதைக்கு தன் தனியுரிமை மதிக்கப்பட வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். பெங் ஷூயேய் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு செய்தியறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

  14. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்