ஆர்சிபி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் தற்போதைய ஆட்டத்துக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இன்றைய நாளில் இந்த பக்கத்தில் இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு

    கிரிக்கெட்

    பட மூலாதாரம், Virat Kohli

    படக்குறிப்பு, விராட் கோலி

    ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

    ஐபிஎல் போட்டியின் தற்போதைய ஐக்கிய அரபு எமிரேட் ஆட்டங்களுக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக விளையாடுவேன் என்றும் கோலி கூறியிருக்கிறார்.

    இந்த வார தொடக்கத்தில், வரவிருக்கும் ஐசிசி டி 20 உலக கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார், ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்டில் அவர் கேப்டனாக தொடருவதாக கூறினார்.

    ஆர்சிபி அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த அணியை 132 போட்டிகளில் விராட் கோலி வழிநடத்தினார்.

    இந்த எண்ணிக்கை, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக எம்.எஸ் தோனி வழிநடத்திய 196 ஆட்டங்களுக்குப் பிந்தைய இரண்டாவது மிகப்பெரிய வழிநடத்தலாக கருதப்படுகிறது.

    ஆர்சிபி அணி கோலியின் தலைமையில் 60 போட்டிகளில் வென்றுள்ளது. 65 இல் தோல்வியடைந்துள்ளது. மூன்று ஆட்டங்கள் சமநிலையில் முடிந்தன.

  3. "ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி தந்திருந்தால் தமிழகத்தில் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டிருப்போம்"

    தடுப்பூசி

    ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தற்போது தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..அப்போது அவர் கூறியது:தமிழகத்தில் இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது மாலை 4 மணி வரை 12 லட்சத்து 74 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த 40 ஆயிரம் முகாம் மூலம் 28 லட்சத்து 94 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பொதுமக்களுக்கு 56 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் தடுப்பூசி போடுவதில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. எளிதாக தடுப்பூசி கிடைத்தபோது அதை பயன்படுத்த அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டது. தற்போதும் ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.இந்த செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால் தடுப்பூசி குறைவாகவே வழங்கி வருகிறது. எனவே கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். தமிழகத்தில் மூன்றாம் அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

    மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற வதந்தி பரவியது . அதற்கும் தயாராக தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சுகாதார துறையில் பணி வாங்கி தருவதாக ஏமாற்றிய 3 பேர் மீது நிச்சயம் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

  4. பஞ்சாபின் தலித்' முதல்வராகும் சரண்ஜித் சன்னி - யார் இவர்? சர்ச்சை என்ன?

    பஞ்சாப் அரசியல்

    பட மூலாதாரம், CHARANJIT SINGH CHANNI

    படக்குறிப்பு, சரண்ஜித் சிங் சன்னி

    பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சன்னி (49) நாளை பதவியேற்கவிருக்கிறார்.

    அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார்.

    பஞ்சாப் மாநிலத்தின் ராம்தஸியா சீக்கியர் (பட்டியலினத்தில் உள்ளது) சமூகத்தைச் சேர்ந்தவர் சரண்ஜித் சிங். அங்குள்ள சம்கூர் சாஹிப் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு இவர் தேர்வானார்.

    கேப்டன் அமரிந்தர் சிங் அமைச்சரவையில் 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சேர்க்கப்பட்ட இவருக்கு தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய பிறகு அந்த பதவிக்கு ரந்தவா அல்லது சரண்ஜித் சிங் தேர்வாகலாம் என்று கூறப்பட்டது.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  5. பஞ்சாப் முதல்வர் பதவிக்கு சரண்ஜித் சிங் சன்னி தேர்வு

    சரண்ஜித் சிங் சன்னி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சரண்ஜித் சிங் சன்னி

    பஞ்சாப் முதல்வர் பதவிக்கு சரண்ஜித் சிங் சன்னியை பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி ஒரு மனதாகத் தேர்வு செய்திருப்பதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் டிவிட்டரில் தெரிவித்தார்.

    சன்னி சீக்கியவர். பட்டியல் சாதியை சேர்ந்தவர்.

    அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்தவர் சன்னி.

  6. மாற்றிப் பேசுவது தி.மு.கவுக்கு கைவந்த கலை!- ஜி.எஸ்.டி விவகாரத்தில் ஓ.பி.எஸ் விமர்சனம்

    `ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசுவது தி.மு.கவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது' என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

    பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரும் விவகாரத்தில் தி.மு.கவின் நிலைப்பாட்டை இவ்வாறு அவர் சாடியுள்ளார்.

    உ.பி மாநிலம் லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காத நிலையில், அவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ` கலால் வரி மற்றும் மேல் வரி விதிப்புகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மத்திய அரசின் வருமானம் அதிகரித்த நிலையில், மாநிலங்கள் பெரும் அளவில் வருவாய் இழப்பை சந்திக்கின்றன.

    இந்தநிலையில், ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது மாநிலங்களுக்கு மிகப் பெரிய வரி வருவாய் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அநீதியாகவும் அமையும். பெட்ரோல், டீசலுக்கான மேல் வரிகளை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த தங்களின் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    "மாநில சுயாட்சி, நீட் தேர்வு உள்பட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசுவது தி.மு.கவுக்கு வாடிக்கையாக உள்ளது. அந்த வரிசையில் பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்றார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது" என்கிறார் ஓ.பி.எஸ்.மேலும், "ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திலும், ` பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோலிய பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலைப்பாடு மாறிவிட்டது. லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டிக்கான 45வது கவுன்சில் கூட்டத்தில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெட்ரோல், டீசலை சரக்குகள் மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் பரிசீலிக்கப்பட்டது. இதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.இதில், தி.மு.க சார்பில் நிதி அமைச்சர் பங்கேற்காவிட்டாலும், மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதாவது, ஜி.எஸ்.டியின்கீழ் பெட்ரோலிய பொருள்கள் வருவதை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய தி.மு.கவின் நிலைப்பாடாக இது உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதன் காரணம், எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதால்தான் என்ற ஐயம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு பெட்ரோலிய பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் கொண்டு வந்து தேர்தலுக்கு முந்தைய தி.மு.கவின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் ஓ.பி.எஸ்.

  7. டெல்லியில் பாரத தரிசனப் பூங்கா

    டெல்லியில் உருவாக்கப்பட்ட பாரத தரிசனப் பூங்கா அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பூங்காவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 21 வரலாற்றுச் சின்னங்களின் மாதிரிகள் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூங்காவுக்கு ரூ.100 நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அலுவலர்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. புதிய பஞ்சாப் முதல்வர் யார்? காங்கிரஸ் இன்று முடிவு செய்யும்

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவுடன் ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து சனிக்கிழமை விலகினார். அவரது விலகல் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து புதிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரை (அதாவது முதல்வரை) தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று நடக்கிறது.

    முன்னதாக, பஞ்சாப் வளர்ச்சிக்கு கேப்டன் அமரிந்தர் சிங் ஆற்றிய பங்களிப்பை புகழ்ந்து காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், புதிய சட்டமன்றக் குழுத் தலைவரை சோனியா காந்தி தேர்ந்தெடுப்பார் என்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜய் மாக்கென் தெரிவித்தார்.

  9. விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பு, குறைந்தபட்ச வரம்பு 15 நாள்கள் நீடிக்கும்

    விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பு, குறைந்தபட்ச வரம்பு ஆகியவை 15 நாள்களுக்கு நீடிக்கும். எல்லா நேரங்களுக்கும் இந்த வரம்பு செல்லுபடியாகும் என்றும், 16வது நாளில் இருந்து விமான நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணங்களை முடிவு செய்யலாம் என்றும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. ரூ.1500 கோடி கட்டணத்தில் விண்வெளி சென்றவர்கள் பூமி திரும்பினர்

    விண்வெளி

    பட மூலாதாரம், Getty Images

    கடந்த மூன்று நாள்களாக பூமியைச் சுற்றி வந்த விண்வெளிப் பயணிகள் தங்களது சாதனைப் பயணத்தை முடித்துக் கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பத்திரமாக விழுந்தனர்.

    விண்வெளி வீரர்கள் அல்லாத சாதாரணமானவர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று திரும்புவது இதுவே முதல் முறையாகும்.

    இன்ஸ்பிரேஷன் 4 என்ற திட்டத்தின்படி கடந்த புதன்கிழமையன்று ஃப்ளோரிடாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் இவர்கள் புறப்பட்டனர். புளோரிடா நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவில் இருவர்கள் பூமிக்குத் திரும்பினர்.

    தண்ணீரில் விழுவதற்கு முன்பாக நான்கு பாராசூட்கள் மூலம் விண்கலம் விழும் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. உடனடியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் படகுகுகள் அதை மீட்பதற்கு விரைந்தன.

    கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் இந்தக் குழுவுக்குத் தலைமையேற்று வழிநடத்திச் சென்றார்.

    இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு நான்கு பேருக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.1500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக டைம் இதழ் கூறியிருந்தது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  11. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்