இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, ஷி ஜின்பிங், சீனாவையும் இந்தியாவையும் "நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் பங்காளிகள்" என்று வர்ணித்தார்.
அந்த வாழ்த்துச் செய்தியில்,கடந்த ஓராண்டில் சீனா-இந்தியா உறவுகள் தொடர்ச்சியாக மேம்பட்டு வளர்ந்துள்ளன என்றும், இது உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ஷி ஜின்பிங் கூறினார்.
சீனாவும் இந்தியாவும் "நல்ல அண்டை நாடுகள், நண்பர்கள் மற்றும் பங்காளிகளாக" இருப்பதுதான் சரி என்று சீனா எப்போதும் நம்புகிறது என்று சீன அதிபர் கூறினார்.
இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தி, நிலையான உறவுகளை வளர்க்க ஒருவருக்கொருவர் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்று நம்புவதாக ஷி ஜின்பிங் தெரிவித்தார்.











