You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம் விவாதம்: "நாட்டின் பாதுகாப்பில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது"
மும்பை தாக்குதல் நடைப்பெற்று இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசு முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளதா? பாதுகாப்பு தொடர்பாக அரசின் பங்களிப்புடன் மக்களுக்கும் பொறுப்புள்ளதா? என்ற கேள்விக்கு நேயர்கள் பதிவிட்ட முக்கியமான கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.
"உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருவதால் மதவாத வெறுப்பரசியலை கொஞ்சம் நிறுத்தி இருக்கிறது மத்திய அரசு, இல்லையென்றால் தீவிரவாதிகள் ஊடுருவல் எல்லையில் பதற்றம் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருப்பார்கள்." என்று தன் கருத்தினை பதிவிட்டுள்ளார் பீர் முகமது.
"ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மும்பை தாக்குதலில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிகமானோர் இலங்கை கடற்படையினரால் கடந்த முப்பது ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதிலிருந்தே நாட்டின் பாதுகாப்பு பாரபட்ச தன்மையை எளிதில் புரிந்து கொள்ளலாம். மும்பை தாக்குதலில் இந்திய அதிகாரிகளின் பங்களிப்பைக் கண்டறிந்த உளவுத்துறையால் தாக்குதல் நடவடிக்கைகளை முன்கூடியே கண்டறியத் தவறியதில் இருந்தே நாட்டின் பாதுகாப்பு திறத்தன்மையை எளிதில் கணக்கிடலாம்." என்கிறார் சக்தி சரவணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்