You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் அடைப்பு
தமிழக சட்டசபையில் நிகழ்ந்த அமளியை தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான சிறப்புக் கூட்டம் தொடங்கியது.
கூட்டம் தொடங்கிய பிறகு எம்.எல்.ஏக்கள் சிலர் சட்டப்பேரவையில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தி.மு.கவின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
தொடர்ந்து தி.மு.க எல்.எல்.ஏக்கள் சபையில் அமளியில் ஈடுபட்டனர்.
இச்சூழலில், சட்டப்பேரவை அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும், சட்டப்பேரவை வளாகத்திற்கு பாதுகாப்பு படையினர் நுழைந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்