அமெரிக்கா மற்றும் கனடாவில் 10 கோடி பேரின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு

கேபிடல் ஒன்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா மற்றும் கனடாவில் 106 மில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கேபிடல் ஒன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, ஹேக் செய்ததாக கூறப்படும் நபரை திங்களன்று கைது செய்தபின் வெளியாகியுள்ளது.

கிரெடிட் கார்ட், கடன்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை வழங்குகிறது கேபிடல் ஒன் நிறுவனம்.

கிரெடிட் கார்ட் வாங்குவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், அலைப்பேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாக கேபிடல் ஒன் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹேக் செய்த நபருக்கு கிரெடிட் கார்ட் எண்கள் கிடைக்கவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

இந்த தகவல் திருட்டால் அமெரிக்காவில் 100 மில்லியன் பேரும் கனடாவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் ஜூலை 19ஆம் தேதியன்று கண்டறியப்பட்டது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 10 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு

பட மூலாதாரம், ILEXX

நிறுவனத்தின் உள்கட்டமைப்பின் பாதுகாப்புத்தன்மையில் இருந்த குறைப்பாட்டை ஹேக் செய்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என கேபிடல் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெயர்கள், பிறந்த தேதி உட்பட க்ரேடிட் ஸ்கோர்ஸ், அளவு, மீதமுள்ள தொகை, பொருட்களுக்கு பணம் செலுத்திய தகவல் மற்றும் தொடர்பு எண்ணங்கள் ஆகியவையும் திருடப்பட்டுள்ளதாக கேபிடல் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறது கேபிடல் ஒன்?

இந்த தகவல்கள் மோசடிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும், இருப்பினும் இந்த தகவல் திருட்டு குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என்றும், அவர்களுக்கு இலவச வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ANADOLU AGENCY

பட மூலாதாரம், ANADOLU AGENCY

அந்த நிறுவனத்தின் தலைவர் ரிசார்ட் டி. பேர்பேன்ங், "இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் பிடிப்பட்டார் என்பது குறித்து நன்றிடன் உணர்வதாகவும், தகவல் திருட்டு குறித்து தான் மிகவும் வருத்தம் தெரிவிப்பதாகவும்." அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய கவலை குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன். இதை சரி செய்வது எனது கடமை எனவும் தெரிவித்தார்.

ஹேக் செய்தது யார்?

இந்த தகவல் திருட்டு தொடர்பாக சீட்டல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மென்பொறியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

பேஜ் தாம்ஸன் என்னும் அந்த 33 வயது நபர், கம்ப்யூட்டர் மோசடி மற்றும் தாக்குதல் குற்றத்தில் திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தாம்ஸனுக்கு அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் சிறைதண்டனையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :