You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ட்ராமி சூறாவளி: என்ன ஆனது ஜப்பானுக்கு?
மோசமான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் ஜப்பான் சற்று தடுமாறிப்போயுள்ளது.
ட்ராமி சூறாவளி (டைஃபூன்) தாக்கியதில் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மேற்கு ஒசாகா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளி தாக்கியது. விமானம் மற்றும் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ 750,000 வீடுகள் மின்சார சேவையை இழந்தன.
ஏறத்தாழ 84 பேருக்கு இந்த சூறாவளியினால் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம்தான் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சூறாவளி மேற்கு ஜப்பானை தாக்கியது.
செப்டம்பர் தொடக்கத்தில் தாக்கிய அந்த சூறாவளியில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :