You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா அதிபருக்கு மிரட்டல் விடுத்த இஸ்ரேல் அமைச்சர்
சிரியாவின் பிராந்தியத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை அச்சுறுத்த இரான் படைகளை அனுமதித்தால் சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்துக்கும் அவரது ஆட்சிக்கும் அது முடிவாக இருக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யுவல் ஸ்டீனிட்ஸ் கூறியிருக்கிறார்.
இரான் அல்லது அதன் சார்பிலான படைகளின் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
சமீபத்தில் சிரியாவில் உள்ள தமது ராணுவத் தளங்களின் மீது, இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பழிவாங்கப் போவதாக இரான் சமீபத்தில் சூளுரைத்திருந்தது.
சிரியாவில் இருந்து தாக்குதல் நடத்த இரானால் முடியும் என்றால், அது அசாத் மற்றும் அவரது அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்றுஸ்டீனிட்ஸ் கூறினார்.
சிரியா உள்நாட்டுப் போரில் அதிபர் அசாத்துக்கு ஆதரவளிக்கும் இரான், தனது துருப்புக்களையும், ஆதரவு குழுக்களையும் அனுப்பியிருக்கிறது.
இரானிய ராணுவம், இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அப்பால் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் என்று இஸ்ரேலியர்கள் கவலைப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்